எப்படி அவளால் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்க முடிகிறது? வடிவு மனம் குமைந்தாள்.
கர்ப்பிணியான சிவரஞ்சனி வேலைகளை இழுத்துப்போட்டு செய்துகொண்டிருப்பதை எப்படி அவளால் பார்த்துக்கொண்டிருக்க முடிகிறது?
தாங்க முடியாமல் கணவனிடம் சிலநேரம் புலம்புவாள் வடிவு.
“நான் கவிதாவைப் பார்த்துக்கிறேன் அத்தை.”
சிவரஞ்சனியே முன் வந்தாள்.
“இந்த மாதிரி நேரத்தில் நீ எப்படிம்மா இருப்பே?”
“எல்லாம் முடியும் அத்தே. நீங்க கவலைப்படாதீங்க.”
அவள் மேலும் வருத்தப்படவே,
“அத்தை நான் வேணும்னா மேனகாவை துணைக்கு அழைச்சுக்கிறேன். அவளும் படிப்பை முடிச்சுட்டு வீட்டில்தானே இருக்கிறா. இல்லைன்னா நான் அம்மாவை வரச்சொல்றேன்.”
அவள் கருப்பையாவிடம் சொல்ல அவனும் தன் மாமாவிடம் பேசி மேனகாவை வரவழைத்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}