மகாலெட்சுமி மனோரஞ்சனியுடன் நன்றாக ஒட்டிக்கொள்வாள்.
அவள் அப்படியே உருவத்தில் சிவரஞ்சனியை ஒத்திருந்தாலும் அவளது குணங்கள் எல்லாம் கருப்பையாவைக் கொண்டேயிருக்கும்.
இப்போதே அவள் கட்டும் மண் வீடு அத்தனை அருமையாக இருக்கும்.
நோட்டுப் புத்தகத்தில் ஏதாவது வரைந்தால் கூட அதில் கட்டிடம்தான் இருக்கும்.
கருப்பையா தன் மகளை மெச்சிக்கொள்வான். அவனுக்கு தன் வாரிசாய் மகள் வந்து வாய்த்ததில் அத்தனை சந்தோசம்.
மகளுடன் கூட்டணி போட்டுக்கொண்டு மனைவியிடம் சண்டை போடுவான்.
உள்ளே வந்த கருப்பையா மனைவியின் காதைப் பிடித்துத் திருகினான்.
“என்னடி இப்படி பண்ணிட்டே. அம்மா வேற நீ என்னக் கேட்கிறேன்னு தெரியாமல் உனக்குச் சப்போர்ட் பண்றாங்க.”
“நான் என்ன கேட்கறேன்னு தெரிஞ்சாலும் எனக்குத்தான் சப்போர
...
This story is now available on Chillzee KiMo.
...
் சென்று தேடினாள். அங்கேயும் அவள் இல்லை. மகாலெட்சுமி அவளைக் கண்டதும் ஓடிவந்து காலைக் கட்டிக்கொண்டாள். பேத்தியைத் தூக்கிக்கொண்டாள்.
‘மகளையும் கவனிக்காமல் விட்டுவிட்டு அப்படி என்னதான் செய்கிறாள்?’
“வாங்க அத்தை. நல்லாருக்கீங்களா? யாரை தேடறீங்க?”
அங்கே வந்த கவிதா கேட்டாள்.