(Reading time: 10 - 19 minutes)

கண்களில் கண்ணீர் பொங்க.... இல்ல மேடம்.... ராஜகுட்டி பாவம்..... அதும் குழந்தை சாப்பிடுறதுல போய் என்னால எப்படி நீங்க கொடுத்த பவுடர் யா கலக்க முடியும்.... எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு..... 

அதும், கீதா அக்கா ரொம்ப நல்லவங்களா தெரியுறாங்க.... அவங்களுக்கு துரோகம் பண்ண கஷ்டமா இருக்கு.  என்று கூறியவளை பார்த்த சிவகாமி அம்மா கோபத்தில் அவளை அடிக்க கையை ஓங்கி பொழுது கோபி அவரது கையை தடுத்தான்.

அக்கா.... என்ன பண்ற..... பாவம் இவ ரொம்ப பயந்துட்டா போல.....அவளை விடு.....

நித்தியாவின் அருகில் சென்றவன்.... பயப்படாத டா.....  என்று கூறியவன் அவனது செல் போனியில் இருந்து ஒரு வீடியோ வை காட்டினான்.

அதை பார்த்த நித்திய கதறி அழுதாள்.

அச்சோ..... இப்ப சொல்லு நீ பாவமா.... இல்ல ராஜகுட்டி பாவமா..... என்று சிரித்தவரேயே கேட்டான்.

எங்களோட டார்கெட் நீ இல்ல அந்த கீதா தான்.  நீ அவளுக்கு பாவம் பார்க்க போய் உன் குடும்பத்தை இழந்துடதா.

அடுத்து, நான் சொல்றது எதாவது நீ செய்யல.... அவ்ளோதான்.... இந்த மாதிரி கூப்பிட்டு எல்லாம் பேசிட்டு இருக்க மாட்டேன்..... 

இப்ப சொல்லு..... நான் உன்ன என்ன சொல்லி இங்க கூட்டிட்டு வந்தேன் ... குரூரமாக சிரித்து கொண்டு கேட்டான்.

அதும் ஆழமா சிரிச்சுட்டு சொல்லு பார்ப்போம்.

நித்யா.... ஆழ்த்த மூச்சை இழுத்து விட்டால்.... கண்களை அழுத்தி துடைத்தவாள்.....

ரிஷியும் கீதாவையும் நான் கண்டிப்பா பிரிச்சுடுவேன்.... சார் நீங்க கவலைப்படாதீங்க என்று சிரித்த முகத்துடன்  கூறினாள்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்டவள்.

கடவுளையே.... என்னை இவங்ககிட்ட இருந்து காப்பாத்து....... கீதா அக்கா ரொம்ப நல்லவங்க..... என்னால அவங்களுக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது..... அவங்க கல்யாணம் நல்லபடியா நடக்கணும்.  என்ற மனதார  வேண்டி கொண்டாள்.

தன் பின்னால் யாரோ நிற்பதை போல உணர்தந்தவாள்..... திருப்பும் முன்பு, அவளது கைகளை க்ரிஷ் பிடித்து இழுத்தான்.

தீடிர் என்று க்ரிஷ்யை எதிர்பார்க்காதவாள்  அவன் மிதையே மோதி கொண்டு நின்றாள்.  

க்ரிஷ் அவளது கையை பிடித்து தர தர வென்று இழுத்து வந்தான்.

ஹேய்.... என்ன பண்ற என் கையை விடு...... என்று கத்தியவளின் கன்னத்தில் பளார் என்று ஒரு அரை விட்டான்.

அவன் விட்ட அரையில்.... நித்யா பட் என்று அந்த மொட்டை மாடியின் வாசலாளில் இடித்து கொண்டு விழுந்தாள்.

ஆனாலும், அவளை தூக்காது க்ரிஷ் மேலும் அவளை அடிக்க கை ஓங்கினான்.

இருவரும் எதிர் பார்க்காத வகையில், மொட்டை மாடியில் சிறிது நேரம் நடக்கலாம் என்று மாடிக்கு வந்த கீதா.... நித்யாவும் க்ரீஷ்யும் இருந்த கோலத்தை கண்டு அதிர்ந்தாள்.

Thank you Viewers and Chillzee Team

தொடரும்

Episode # 18

Episode # 20

Go to Ennavale story main page

{kunena_discuss:1184}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.