“ஹ்ம்ம்ம் எல்லா என் நேரம்.. என் டயலாக்கையே எனக்கு திருப்பறீங்களே... “என்று அவரை செல்லமாக முறைத்தாள் பாரதி.. ஜானகியும் சிரித்துகொண்டே
“சரி.. திரும்பு.. இந்த பூவை வச்சு விடறேன்..” என்று அவளை திருப்பி தன் கையில் கொண்டு வந்திருந்த மல்லிகை சரத்தை நீளமாக மடித்து அவள் தலையில் வைத்தார்... பின் அவளை மேலும் கீழும் பார்த்தவர்
“வாவ்... சூப்பரா இருக்க பாரதி.. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. இரு திருஷ்டி பொட்டு வச்சு விடறேன்... “ என்று அவளுக்கு திருஷ்டி கழித்து அருகில் இருந்த கண் மையை எடுத்து அவளுக்கு சின்ன திருஷ்டி பொட்டு வைத்தார்...
பாரதியும் சிரித்து கொண்டே
“ஹ்ம்ம்ம் நான் ரெடி அத்தை.. வாங்க போகலாம்.. “ என்க
“அடடா.. சர்ப்ரைஷ் கிப்ட் ன உடனே என் மறுமக ரெடியாயிட்டாளே... அப்ப இத காலையில
...
This story is now available on Chillzee KiMo.
...
் பழசை பேசக்கூடாது... அண்ணா அண்ணி உங்களுக்கும் சேர்த்துதான்.. “ என்று சிரித்து கொண்டே சூடம் ஏற்றி அந்த முருகனுக்கு ஆரத்தி காண்பித்து தர்மலிங்கத்திடம் தட்டை காட்ட, அவரும் அந்த முருகனை வணங்கி அதில் இருந்த விபூதியை எடுத்து தன் நெற்றியில் வைத்து கொண்டு பின் பாரதியின் நெற்றியில் வைத்து விட்டார்...