இந்திராவும் அகிலாவும் அதற்குள் நண்பர்களாகி இருக்க அவர்களும் அடம் பிடித்து பாரதிக்கு வளையல் போட்டனர்...
அருகில் நின்று கொண்டு ஆதி தன் மனைவியையே ரசித்து பார்த்து கொண்டிருந்தான்.. ஆனால் அவள் மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை... நொடிக்கொரு தரம் அவள் அப்பாவிடமே சென்று நின்றன அவள் கண்கள்...அவரும் முன் வரிசையில் அமர்ந்துகொண்டு தன் மகளை ரசித்து பார்த்துகொண்டிருக்க, அதை கண்டு பாரதி துள்ளி குதித்தாள் மனதுக்குள்
பின் அனைவரும் வளையல் போட்டு முடிக்க, ஆதி அருகில் வந்து அவன் பாக்கெட்டில் வைத்திருந்த அந்த அழகிய வைர வளையலை எடுத்து அவள் கை பிடித்து வளையலை போட்டு அந்த சந்தனத்தை, எடுத்து அவள் கன்னத்தில் பூச அவள் கன்னமோ வெக்கத்தில் சிவந்தது..
அனைவரும் ஓ வென்று கத்த அவனும் மெல்ல வெக்கபட்டு சிரித்து கொண்டே நகர்
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும்.. அவங்களுக்காகத் தான் நான் வர்ரேன்.. உனக்காக ஒன்னும் நான் வரலை... “ என்று சிரித்தான்...
பின் நண்பர்கள் மூவரும் கதை பேசிக்கொண்டே அனைவரையும் சாப்பிட அழைத்தனர்
தங்கமே விருந்து சமைத்திருக்க அனைவரும் உணவு மேசையில் அமர, பாரதி சென்று அவள் அப்பா பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்...