“எவ்வளவு நாளாகிறது தன் அப்பா இந்த மாதிரி விபூதி வைத்து விடுவது..” அவர் கை பட்டதும் அவளுக்கு சிலிர்த்தது...
பாரதிக்கு வைத்து விட்டவர்
“நீங்களும் வாங்க மாப்பிள்ளை... “என்று எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்த ஆதியை பார்த்து சொல்ல, அப்பொழுதுதான் எதிர்புறம் பார்த்தாள்..
ஆதியும் அங்கு தான் நின்று கொண்டிருந்தான்... அவள் அறைக்குள் வந்ததில் இருந்தே அவர்களை பார்த்து கொண்டு அமைதியாக நின்று கொண்டிருந்தான்...
இதுவரை காணாதவனை கண்டதும் அதுவும் அவனும் தங்கள் திருமணத்திற்கு எடுத்திருந்த பட்டு வேட்டி சட்டை யை கட்டி அசத்தலாக நின்றிருந்தவனை கண்டதும் பாரதியின் கண்கள் விரிந்தன..
அவனும் அவளை கண்டு குறும்பாக கண் சிமிட்டி முன்னே வர, தர்மலிங்கம் அவனுக்கு நெற்றியில் விபூதியை வைக்க, இருவரும் ஒரே நேரம
...
This story is now available on Chillzee KiMo.
...
ித்து வைக்க, பின் அனைவரும் வரிசையாக அவளுக்கு வளையல் அடுக்கி சந்தனம் பூசினர்...
ஜானகி ,சுசிலா ,சிவகாமி, மீனாட்சி என அனைவரும் போட்டு ஆசிர்வாதம் பண்ணினர்... தங்கமும் , மாரியையும் போட சொல்ல அவர்களும் முதலில் மறுத்தாலும் பின் தங்கள் சின்ன எஜமானிக்கு வளையலை போட்டு சந்தனம் பூசி வணங்கினர்..