“இதோ அனுப்பி வைக்கிறேன் மாப்பிள்ளை.. நீங்க மேல போங்க.. “ என்று சொல்லி தங்கள் அறைக்கு வந்தார்..
அங்க பாரதி தன் அப்பாவின் தோளில் சாய்ந்து கொண்டு செல்லம் கொஞ்சி கொண்டிருக்க, ஜானகியும் அருகில் அமர்ந்து கதை அடித்து கொண்டிருந்தனர்
“பாரதி... மாப்பிள்ளை உன்னை மேல கூப்பிடறார்... மீதி கதைய நாளைக்கு பேசலாம்.. நீ மேல போ.. “ என்று சொல்ல
“அவருக்கு என்ன மா ... நான் இன்னைக்கு உங்க கூட தான் இருப்பேன்... “ என்று சிணுங்க
“பாவம் மாப்பிள்ளை.. நீ காலையில் இருந்து எங்க கூடவேதான சுத்திகிட்டு இருக்க... அவர் உங்கிட்ட பேச முடியாமல் தவிச்சுகிட்டு இருக்கார்... நீ முதல்ல மேல போ.. “ என்று கண்டிக்க தர்மலிங்கமும் அவளை செல்லமாக அதட்ட வேற வழி இல்லாமல் எழுந்தாள்...
லட்சுமி சிரிச்சுகிட்டே ஜானகியிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
ை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கு.. “என்று அவன் கிண்டல் அடிக்க
“இப்ப என்ன சொன்னீங்க... ?? “ என்றாள் இன்னும் அதிர்ச்சி விலகாமல்...
“ஹ்ம்ம் என்ன சொன்னேன்?? ..” என்று யோசித்தவன்
“நான் எப்பவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன் னு சொன்னேன்..”
”இல்லை.. அதுக்கு முன்னாடி?? “