ஆதி அவளை பார்த்து முறைக்க அவளோ அவன் பக்கமே திரும்பவில்லை.. நிகிலனும் வசியும் கண்ணால் ஜாடை செய்து சிரித்து கொண்டனர்..
பின் ஒவ்வொருத்தராக விடை பெற , பாரதியும் உள்ளே சென்று வேற ஒரு புடவையை மாற்றி கொண்டிருக்க, அவளிடம் விடைபெற்று செல்வதற்காக உள்ளே வந்த அகிலா தன் விரலை விட்டு எண்ணவும் பின் எதுவோ யோசிப்பதுமாக இருக்க, ஜானகி அவளிடம்
“என்ன அகிலா கண்ணா?? என்ன யோசிச்சுகிட்டிருக்க?? .. “ என்றார்
“எனக்கு ஒரு சந்தேகம் ஆன்ட்டி... அண்ணிக்கு கல்யாணம் ஆகி 4 மாசம் தான ஆகுது.. அதுக்குள்ள எப்படி அவங்க வயிறு இவ்வளவு பெருசா இருக்கு?? “ என்று அதுவரை தன் மண்டையில் குடைந்து வந்த தன் சந்தேகத்தை கேட்க பாரதி இதுக்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் ஜானகியை பார்த்து முழித்தாள்...
ஜானகி சிரித்துகொண்டே
“அத
...
This story is now available on Chillzee KiMo.
...
தன் பொண்ணு சார்பா அவனிடம் விளக்கம் சொல்ல
“ஐயோ... அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தை... அவள பத்தி தெரியாதா.... காலையில் இருந்து கீழயே இருக்கா.. மேல வரல.. அதான்.. “ என்று அவன் நிலையை வெக்கத்துடன் எப்படி சொல்வது என்று தெரியாமல் மென்னு முழுங்க அதை புரிந்து கொண்ட லட்சுமியும் நமட்டு சிரிப்புடன்