“நான் நன்னா இருகேண்டிம்மா.... நீ எப்படி இருக்க.... காயத்ரி ஆத்துக்கு வந்தா உன்னை பத்தியேதான் பேசிண்டு இருப்பா... நீ இருக்கற தைரியத்துலதான் இன்னும் அவ காலேஜ்க்கு மட்டம் அடிக்காம வர்றா,,,, இல்லைன்னா அவளை கிளப்பி அனுப்பறத்துக்குள்ள என் உசுரு போய்டும்.... உனக்கு பெரிய தேங்க்ஸ்....”
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ரா வெயின் "மையலில் மனம் சாய்ந்த வேளை..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை ஆன்ட்டி.... என்னோட சேர ஆரம்பிச்சுட்டா இல்லை போக போக பாருங்க..... அம்பியா இருக்கற காயத்ரியை ரெமொவாக்கி அந்நியனா மாத்திடறேன்....”,சந்தியா பேச இவர்கள் எல்லாம் யார் என்பது போல் பார்த்தார் காயத்ரியின் தாய்....
ஒருவழியாக விழா ஆரம்பிக்க இவர்கள் அரட்டை கச்சேரி முடிவுக்கு வந்தது....
பரிசு பெற்ற மாணவர்களை மேடைக்கு அழைத்து அமர வைத்தார்கள்.... காயத்ரி அவர்கள் கல்லூரி தாளாளர் மகனின் அருகில் அமர வைக்கப்பட்டாள்...
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
விழாவிற்கு அரசியல் பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் சிலர் வருகை தந்திருந்தனர்.... விழா நேரடி ஒளிபரப்பாக சில சேனல்களில் ஒளிபரப்பாகியது.... விழா ஆரம்பித்த நொடியிலிருந்து தாளாளரின் மகன் காயத்ரியின் அருகில் அமர்ந்து அவளிடம் சிரித்து சிரித்து பேசியபடி இருந்தான்....
விழா ஆரம்பித்து ஒரு மணி நேரம் முடிந்த நிலையில், தாளாளர் பரிசுகளை அறிவிக்க அதை அங்கு வந்திருந்த முக்கிய பிரமுகர் கொடுக்க ஆரம்பிக்க, திடீரென்று மேடைக்கு ஏறிய சக்தி காயத்ரியை எழுப்பி அவளின் கழுத்தில் தன் கையிலிருந்த தாலியை எடுத்து கட்டினான்.....
தொடரும்
Go to Gayathri manthirathai story main page
{kunena_discuss:1216}