ஆதி மஹா வளைகாப்பை பார்த்து வந்த பிறகு தன் மகளுக்கும் அது மாதிரி விழா வைக்கனும் என்று ஆரம்பிக்க, ஜானகிக்கு திருமணத்தின் பொழுதே பாரதி அவள் பெற்றோர்கள் இல்லாமல் மனம் வாடியது நினைவு வந்தது.. அட்லீஷ்ட் இந்த பங்சனுக்காவது அவள் பெற்றோர்களை அழைத்து வர வேண்டும் என்று முடிவு செய்தார்..
அப்பொழுது உடனே போய் உண்மையை சொல்ல முடியாது.. தர்மலிங்கம் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரியாமல் எதுவும் சொல்ல முடியாது என்று தெரிந்து அதை அப்போதைக்கு தள்ளி வைத்தார்...
மீண்டும் ஒன்பதாவது மாதத்தில் ஆதி திரும்பவும் அந்த பேச்சை ஆரம்பிக்க, ஜானகி அவனை தனியாக அழைத்து பாரதி மனதில் இருக்கும் குறையை சொல்ல அவனுமே எப்படியாவது அவளை அவள் குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்து சுசிலா மற்றும் கமலாவையும் கலந்து என்ன செய்யலாம்?? இதை எப்படி தர்மலிங்கத்திடம் சொல்லுவது என்று கலந்து அலோசித்து ஒரு திட்டத்தை தீட்டினர்...
அதன்படி தர்மலிங்கத்தின் உடல் நிலை எப்படி இருக்கிறது என்று தெரிந்து அதுக்கு தகுந்த மாதிரி அந்த செய்தியை சொல்ல முடிவு செய்து பாரத்திடம் சொல்லி அவரை செக்கப் பண்ண திருச்சி கமலாவின் மருத்துவமனைக்கு அழைத்து வர செய்தனர்...
ஜானகியும் ஆதியும் பாரதியிடம் சொல்லாமல் அங்கு சென்றிருந்தனர்... அந்த மருத்துவ மனையில் இருந்த ஹார்ட் ஷ்பெஷலிட் இடம் கண்ணன் முன்னாடியே சொல்லி இருக்க அவரும் ஏற்கனவே அவரை பரிசோதித்தவர் என்பதால் தர்மலிங்கத்தை தனியாக ஒரு அறையில் வைத்து அவரிடம் மெதுவாக விசயத்தை சொல்ல ஏற்பாடு செய்தனர்...
அதன்படி அவரை தனியாக சந்தித்த அந்த மருத்துவர் தர்மலிங்கத்தை பரிசோதித்து அவர் முற்றிலும் குணம் ஆகி இருப்பதால் அவரிடம் பேச்சை ஆரம்பித்தார்...
“ஐயா... உங்க இதயத்தை பரிசோதிக்க சில விசயங்கள் சொல்ல போறேன்.. அதை கேட்டு நீங்க அதிர்ச்சியோ இல்லை ரொம்ப மகிழ்ச்சியோ இல்லாமல் சாதாரணமாக எடுத்துக்கணும்.. “ என்று அவரை முன் கூட்டியே தயார் பண்ணினார் அந்த மருத்துவர்... தர்மலிங்கமும் தலை அசைக்க,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“சரி.. நான் ஒரு நல்ல செய்தியும் ஒரு கெட்ட செய்தியும் சொல்ல போறேன்... உங்களுக்கு எது முதல்ல தெரியனும்..”
தர்மலிங்கமும் சிரித்து கொண்டே நல்ல செய்தியை முதல்ல சொல்லுங்க டாக்டர்.. என்றார்... பின் டாக்டர் வெளியில் நின்றிருந்த ஜானகியையும் ஆதியையும் அழைக்க, உள்ளே வந்த அவர்களை கண்டதும் தர்மலிங்கத்தின் முகம் பிரகாசித்தது.. இவங்க எப்படி இங்க என்று யோசித்துக்கொண்டே வழக்கமாக நலம் விசாரிக்க
டாக்டரும்
” இவங்க தான் உங்களுக்கு ஒரு நல்ல செய்தியை சொல்ல போறாங்க... நீங்க சொல்லுங்க மா.. “ என்று ஜானகியை பார்க்க, அவரும் சிரித்து கொண்டே
“அண்ணா... பாரதியை எங்க வீட்டு மறுமகளாக்கிக்கனும்னு விரும்பறேன்... உங்க மாப்பிள்ளைக்கும் பாரதிய ரொம்ப புடிச்சிருக்கு... நீங்க என்ன சொல்றீங்க.. உங்களுக்கு சம்மதமா?? ... “ என்றார் தயங்கியவாறு
அதை கேட்டு தர்மலிங்கத்திற்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை..ஏற்கனவே அவர் மனதில் எழுந்த எண்ணம் தான்...ஏன் அவர் குடும்பத்தில் அனைவருக்கும் இருக்கும் ஆசைதான்... அதையே ஜானகி கேட்க, ஆச்சர்யத்தில் கண்கள் விரிய ஏற்கனவே டாக்டர் அறிவுருத்தியது நினைவு வர தன் சந்தோசத்தை கட்டு படுத்தி கொண்டு,
“இதுக்கு எதுக்குமா இவ்வளவு தயக்கம்??... இந்த அண்ணன் கிட்ட உன் பொண்ணை கொடுனா னு நீ எப்பவும் உரிமையோட கேட்கலாம்... “என்று சிரித்தவர்
“எனக்கு முழு சம்மதம் ஜானகி மா.... ஆனால் இதுக்கு பாப்பா என்ன சொல்லுமோ தெரியலையே?? அவளுக்கு பிடிச்சிருந்தா போதும்.. பாப்பா கிட்ட கேட்டுட்டு நான் சொல்றேனே.. “ என்றார் அவரும் தயங்கியவாறு...
அதை கேட்டு ஆதிக்கு அதிசயமாக இருந்தது... அவர்கள் வசதியை கண்டு உடனே சரி னு சொல்லாமல் எவ்வளவு வசதி இருந்தாலும் தன் பெண்ணின் விருப்பமே பெருசு.. அவளுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே இந்த திருமணம் என்று அவர் பேசியதில் பூரித்து போனான்...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "காயத்ரி மந்திரத்தை" - சமூக தொடர்கதை...
படிக்கத் தவறாதீர்கள்..
அவர் எவ்வளவு நல்லவர் என்று புரிந்தது.. இவரை புரிந்து கொள்ளாமல் அவரை பற்றி மடத்தனமாக தப்பாக பேசியது நினைவு வர அவனையே திட்டி கொண்டான்...
அவர் சொன்னதை கேட்டு ஜானகிக்கும் ரொம்ப மகிழ்ச்சி...
“ரொம்ப நன்றி னா.. “ என்று அவரை கட்டிகொண்டு டாக்டரை பார்த்து அடுத்த விசயத்தை எப்படி சொல்வது என்று முழித்தார் ஜானகி .. அதை கேட்டு அவர் எப்படி ரியாக்ட் செய்வாரோ?? .குறிப்பா அவருக்கு எதுவும் ஆகி விடக் கூடாது என்று பயந்தனர் ஆதியும் ஜானகியும்...
டாக்டரும் கண்ணால் ஜானகிக்கு ஜாடை செய்து அமைதி படுத்தி பின் அருகில் வந்தவர்
“ஐயா... அடுத்து உங்க மனதுக்கு ஒரு கஷ்டமான செய்தி சொல்ல போறேன்.. இந்த சந்தோஷமான செய்தியை கேட்டு எப்படி இருந்தீங்களோ அதே மாதிரி இந்த கஷ்டமான கசப்பான செய்தியையும் கேட்டு நீங்க கலங்க கூடாது...
You can also check the stories by genre here.
Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here
M | Tu | W | Th | F | Sa | Su | |
---|---|---|---|---|---|---|---|
Mor AN Eve |
11 EVUT PVOVN NiNi |
12 MINN ILU MAMN |
13 VD EMPM KIEN |
14 VMKK KK KaKa |
15 Sush UVME Enn |
16 Siva NKU Tha |
17 KI VTKS EK |
Mor AN Eve |
18 EVUT - NiNi |
19 MMSV ILU MAMN |
20 GM EMPM KIEN |
21 ISAK KK KaKa |
22 EU UMIN EYPI |
23 Siva NKU Tha |
24 KI VTKS EK |
* Change in schedule / New series
* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in