சுசிலா அவருக்கு இன்னோரு ஆபரேஷன் இருக்க, முன்னரே கிளம்பி சென்றிருக்க, மற்ற அனைவரும் மருத்துவமனைக்கு செல்ல தயாராகினர்... வீட்டில் இருந்த பூஜை அறையில் அந்த முருகனை வணங்கி பின் கிளம்பினர்.. ஆதியே காரை ஓட்ட, பாரதி அவன் அருகில் அமர, மற்றவர்கள் பின்னால் அமர்ந்தனர்..
கார் கொஞ்ச தூரம் சென்றதும் பாரதிக்கு ஒரு வித பயம் மற்றும் பதட்டமாக இருந்தது... ஆதியையே ஏக்கமாக பார்த்து வந்தாள்....அவன் எதுவும் ஆறுதலாக சொல்லுவான் என்று நினைத்து.. ஆனால் அவனோ இவள் பக்கமே திரும்பவில்லை.. சாலையையே நேராக பார்த்து காரை ஓட்டி கொண்டிருந்தான்...
கொஞ்ச நேரம் அவன் முகத்தையே ஏக்கமாக பார்த்தவள் பின் வெளியில் வேடிக்கை பார்த்து வந்தாள்... மனதுக்குள் கந்த சஷ்டி கவசத்தை சொல்லிக் கொண்டாள்...
ஆதிக்கும் அவள் அவனை பார்த்தது தெரிந்தது.. அ
...
This story is now available on Chillzee KiMo.
...
முன்னாடியே இப்படி இளிச்சா என்ன.. “ என்று அவள் தலையில் செல்லமாக அவன் தலையால் முட்டி மெல்ல அணைத்து கொண்டான்... அவன் அணைப்பு இன்னும் சுகமாக இருக்க, இப்பொழுது கொஞ்சம் இருந்த கலக்கமும் மறைந்து முகம் தாமரையாக மலர்ந்தது அவளுக்கு..
“ரொம்ப தேங்க்ஷ் மாமா... “ என்று கண்ணடித்தாள் சிரித்தவாறு...