சிறிது நேரத்தில் ஒரு வயது முதிர்ந்த நர்ஷ் உள்ளே வந்து
“சரி .. எல்லாரும் கொஞ்சம் வெளில இருங்க.. குழநதைக்கு பால் கொடுக்கணும்.. “என்று சொல்ல லட்சுமி மட்டும் அங்கு இருக்க அனைவரும் வெளியில் சென்றனர்..
சிசேரியன் பண்ணி இருப்பதால் எழுந்து உட்கார முடியாமல் தடுமாற அந்த நர்ஷ் அவளை சாய்த்து படுக்க வைத்து பால் ஊட்டும் முறையை விளக்க, பாரதியோ கூச்சத்தில் நெளிந்தாள்..
“என்ன மா.. கல்யாணம் ஆகி புருஷன் கூட ஒன்னா வாழ்ந்து ஒரு புள்ளையும் பெத்துட்ட..இன்னும். இப்படி கூச்சப்படற.. “ என்று சிரித்தார்... அந்த நர்ஷ் புதிதாக வேலைக்கு சேர்ந்திருப்பவர்.. அவருக்கு பாரதி ஒரு கன்னித்தாய் என்பது தெரியாது... அவர் அவளை தொட, பாரதி முகத்தை சுளித்து நெளிய, அதை கண்ட லட்சுமி,
“நீங்க போங்க சிஷ்டர்.. நான் பார்த்துக்கறேன்.. “என
...
This story is now available on Chillzee KiMo.
...
ார்...
“எப்படி மா இப்படி ஒரு காரியம் பண்ண உனக்கு துணிச்சல் வந்தது?? இந்த அப்பாவுக்காக எந்த பொண்ணும் செய்ய துணியாத காரியத்தை நீ பண்ணி இருக்கியே... எப்படி டா உன்னால மட்டும் அப்படி முடிந்தது... என் குல சாமி நீ.. உன்னை பொண்ணா பெத்ததுக்கு நான் ரொம்ப பெருமை படறேன்.. “ என்று தழுதழுத்தார்...