“கேடி... “ என்ரு அவனும் சிரித்தவாறு அவளை அணைத்தவாறே மெல்ல அவள் கூட நடந்து வந்தான...
அந்த அறை வாசலை அடைந்ததும் இப்பொழுது பாரதி திரும்பி அனைவரையும் பார்த்து தலையை ஆட்டி மெல்லிய வெக்கத்துடன் சிரித்து கொண்டே பிரசவ அறைக்குள் சென்றாள்... பாரதியின் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை கண்டு அனைவருக்கும் நிம்மதியாக இருந்தது...
தர்மலிங்கம் லட்சுமியுமே ரொம்ப மனம் நிறைந்து இருந்தது... தன் மகளும் மறுமகனும் இப்படி அன்னியோன்யமாக இருக்கிறாங்களே என்று...
லட்சுமி அதையே வாய் விட்டு சொன்னார்..
“பார்த்தீங்களா அண்ணி இந்த பொண்ணை.. அப்பா அப்பானு அவ அப்பா பின்னாடியே சுத்திகிட்டு இருந்தவ, பிரசவத்துக்கு போறப்போ அவ புருசனைத்தான ஓடி வந்து கட்டிகிட்டா... அவ புருஷன்தான் பெருசா போய்ட்டார்... நாமளாம் இரண்டாவதா ஆயிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
பிறந்திருக்கார்..” என்று சந்தோச பட்டார்.. பின் மற்றவர்களும் அந்த குழந்தையை பார்த்த பிறகு ஆதியிடம் கொடுத்தார் ஜானகி ...
கைகள் மெல்ல நடுங்க, பிறந்த குழந்தையின் தலையை எப்படி பிடிப்பது, உடலை எப்படி வைப்பது என்ற எந்த தயக்கமும் இல்லாமல் இலாவகமாக கைகளில் அள்ளிக்கொண்டான் அவன் இளவரசியை....