அவன் குழந்தையை வாங்கியதும் அதை இலாவகமாக பிடித்திருப்பதையும் கண்டவர்களுக்கு ஒரே ஆச்சர்யம்... மஹாவே குழந்தையை தூக்க பயந்ததும் அதை விட ஈஷ்வர் குழந்தையை கண்டு பத்தடி தள்ளி நின்றதயும் கண்டவர்களுக்கு தன் சின்ன மறுமகன் எந்த தயக்கமும் இல்லாமல் ரொம்ப நாள் அந்த குழந்தையை தூக்கியதை போல அழகாக வாங்கியது கண்டு வாயில் விரலை வைத்தனர்...
ஆதிக்கோ தன் மகளை கையில் ஏந்தியதும் இனம் புரியாத பரவசம்... உடலெல்லாம் புதுசுகம் பரவியது... மெல்ல குனிந்து பார்த்தான்.. ரோஜா குவியலாக அதே மென்மையாக சிவந்து அப்படியே அவனையே பார்ப்பதை போல இருந்தாள்...
ஒரு கையால அவன் மார்போடு அணைத்து பிடித்து கொண்டு மறுகையால் மெல்ல அதன் கன்னத்தை தொட்டான்.. இன்னும் அதிர்வலைகள் அவன் உள்ளே...
மெல்ல அவள் அருகில் குனிந்து
“Welcome to th
...
This story is now available on Chillzee KiMo.
...
அனைவரும் அவளை கொஞ்ச, தர்மலிங்கம் வந்து பாரதியின் கையை பிடித்து கொண்டார்.அவருக்கும் பெருமையாக இருந்தது.. தன் கையில் குழந்தையாக இருந்தவள் இப்போ அவளே ஒரு குழந்தைக்கு தாயாக ஆகி விட்டாளே..” எனறு .. பாரதியும் அவர் கையை பிடித்து கொண்டு உணர்ச்சி வசப்பட வேண்டாம்.. என்று தலைய ஆட்டினாள் சிரித்தவாறு ...