(Reading time: 13 - 25 minutes)

“எங்க அருளுக்கு என்ன குறைச்சல் தம்பி..” என்று பூங்கொடி கேட்க,

“நான் வேண்டாம்னு சொன்னதால அருள்க்கிட்ட குறை இருக்குன்னு அர்த்தம் இல்ல.. இன்னும் சொல்லப்போனா அருளை எனக்கு ரொம்ப பிடிக்கும்.. தெளிவான பொண்ணு, நல்ல டேலண்ட் இருக்கு அவக்கிட்ட,

ஆனா நான் கல்யாணம் செஞ்சுக்க போற பொண்ணை பத்தி நான் நிறைய கனவு வச்சிருக்கேன் ஆன்ட்டி.. சின்ன வயசுல இருந்து அம்மா என்னை நிறைய விஷயத்துல அடக்க பார்ப்பாங்க.. அவங்க வளர்ந்த விதம் வேற, அதனால அந்த நாட்டோட கல்ச்சர் அவங்களுக்கு பயத்தை கொடுத்துச்சு.. அப்பா என்ன சொன்னாலும் என்னோட விஷயத்துல அப்படித்தான் இருப்பாங்க..

எனக்கு பிடிச்சதை செய்ய விடாம எப்பவும் ரூல்ஸ் போட்டு அம்மாங்கிற ஒரே காரணத்தால தான் நான் அதுக்கு கட்டுப்பட்டேன்.. அப்புறம் நான் வளர வளர தான் அவங்களும் மாற மாற ஆரம்பிச்சாங்க.. இருந்தும் இப்பவும் சில விஷயத்துல அவங்க அப்படித்தான் இருப்பாங்க..

அதனால நான் அம்மாவை வெறுத்துட்டேன்னு இல்லை. ஆனா அம்மா கண்டிப்பு காட்டும் போது கசக்க தான் செய்யும்.. அருளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு அம்மா ஞாபகம் தான் வரும்.. எந்த ஒரு செயலை செய்யணுமாலும் அதுல குடும்பத்தை முன்னிருத்தி இப்படி தான் நான் இருப்பேன்ன்னு பிடிவாதமா இருப்பா.. இன்னும் கூட அவ எப்படி உங்கக்கிட்டல்லாம் சொல்லாம அன்னைக்கு என்கூட ரெசார்ட்க்கு வந்தான்னு தெரியல..

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

இப்போ அருளோட இந்த குணத்தை நான் தப்பு சொல்லல.. அவளை பொறுத்தவரைக்கும் அது நல்ல குணம் தான், ஆனா எனக்கு அது செட் ஆகாது.. எனக்கு வர வைஃப் என்னை டாமினேட் பண்ணாம, ஒரு ப்ரண்ட்லியா என்னை புரிஞ்சிக்கிட்டு என்னை என்னோட இஷ்டத்துக்கு இருக்க விட்றவளா இருக்கணும்னு ஆசைப்பட்றேன்..”

அதாவது உங்க பொண்ணு பழைய பஞ்சாங்கமா இருக்கா.. இப்போதைய காலத்துக்கு ஏத்தவ அவ இல்ல.. அவளுக்கெல்லாம் லண்டன் வாழ்க்கை செட் ஆகாது என்பதை சொல்லாமல் சொல்கிறான் என்பதாக தான் அருள் புரிந்துக் கொண்டவள், அவனது இந்த பேச்சில் முற்றிலும் மனதால் காயமடைந்தால் என்று தான் சொல்ல வேண்டும்.

அவன் தெளிவாக கூறியும் கலை திரும்ப ஏதோ பேச வர, இப்போது புகழேந்தி வாயை திறந்தார். முன்பே நடந்த சம்பவத்திற்காக இந்த திருமணம் இருக்கக் கூடாது என்று சொல்லியிருந்தாரே, இப்போது அமுதன் அவன் முடிவைக் கூறவும்,

“நீயும் பூங்கொடியும் சொன்னீங்கன்னு தான் நான் இவ்வளவு தூரம் வந்ததே, அந்த தம்பிக்கு விருப்பம் இல்லைங்கிற அப்போ இதுக்கும் மேல இந்த பேச்சு வேண்டாம் விட்ருவோம்..” என்றார்.

குடும்பத்தில் மற்றவர்களுக்கும் புகழேந்தி சொல்வது தான் சரி என்பது போல் தோன்றியது. நீ என்ன வேண்டாம் என்று சொல்வது, நாங்களே வேண்டாமென்று சொல்லுகிறோம் என்பதாக தான் ஒவ்வொருவரின் மனநிலையாக இருந்தது.

ஆனால் கலையரசியால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதேபோல் அவனது முடிவை ஏற்றுக் கொள்ளாத இன்னொரு நபர் சுடரொளி.

அமுதன் மட்டும் இந்த திருமணம் வேண்டாமென்று மறுத்தால், பின் மீண்டும் மகி, அருள் திருமணப் பேச்சை எடுப்பார்களோ, என்று பயந்தவள்,

“இதெல்லாம் ஒரு காரணம்னு சொல்லி நீ அருளை கல்யாணம் செய்ய மாட்டேன்னு சொல்றது நல்லா இல்லை சார்லி..” என்றாள்.

“ஏதாச்சும் உளறாத சுடர்..” என்று அவள் பேச்சுக்கு கோபமாக பதில் கூறினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பத்மினியின் "உன்னை விட மாட்டேன் என்னுயிரே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

ஏற்கனவே இப்படி அத்தனை பேர் சூழ்ந்திருக்க, ஒரு சங்கடமான நிலையை தன்னை நிறுத்தியிருக்கிறார்களே, கதிரோ இல்லை புகழோ தனியாக அவனிடம் இதைப்பற்றி பேசியிருக்கலாம், இல்லை அருளோ மகியோ வீட்டினர் இப்படி ஒரு முடிவெடுத்ததை முன்பே கூறியிருக்கலாம்,

ஏன் சுடரிடம் முன்பே கேட்டானே, அப்போது அவளாவது இந்த விஷயத்தைப்பற்றி எடுத்து சொல்லியிருக்கலாம், ஆனால் விஷயத்தை சொல்லாமல் சர்ப்ரைஸ் மண்ணாங்கட்டி என்று மழுப்பி தன்னை இப்படி அத்தனை பேருக்கும் முன் வந்து நிறுத்தியிருக்கிறாளே என்ற கோபம் அவனுக்கு இருந்தது.

அவள் பேசவும் அவன் அதை வெளிக்காட்ட, சுடரோ, “என் நிலையை யோசித்துப் பார்த்தானா? இல்லையா? என நினைத்து அதை அவனிடம் அத்தனை பேர் முன்பு சொல்லமுடியாமல்,

“ எனக்காக கூட அருளை கல்யாணம் செய்ய ஒத்துக்கமாட்டீயா? நீ வேண்டாம்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும்னு யோசிச்சு பாரு சார்லி..” என்று மறைமுகமாக தன் பிரச்சனையை அவள் எடுத்துச் சொல்ல,

நீ மகியை விரும்பறதால, அவனை நீ கல்யாணம் செய்துக்கணும்னு நான் அருளை கல்யாணம் செஞ்சுக்க முடியுமா சொல்லு..” என்று அவளது பிரச்சனையை அத்தனை பேர் முன்பும் அவன் தெரியப்படுத்தினான்.

ப்ளாஷ்பேக் இந்த அத்தியாயத்தில் முடிக்க முடியவில்லை. அதனால் அடுத்த அத்தியாயத்தில் முடித்து, நிகழ்காலத்தில் என்ன நடக்க இருக்கிறது என்று பார்க்க போயிடலாம்.. நன்றி.

உறவு வளரும்...

Episode # 46

Episode # 48

Go to Nenchodu kalanthidu uravale story main page

{kunena_discuss:1155}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.