சீதாலெட்சுமி, கவலையுடன் மகளையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். கண்கள் கண்ணீரைச் சொறிந்தன.
மகளுக்கு நேரே அழ முடியாது.
மேனகாவிற்கு அவளது மனநிலை புரிந்தது.
“வாங்கம்மா.”
கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
மகாலெட்சுமி அறைக்குள் சென்று உடை மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று ஓடினாள்.
“நீ போம்மா. நான் மகாவை அழைச்சுட்டு வர்றேன்.”
“சரிம்மா. வந்துடுங்க. நானும் அடுப்பில் பாதி சமையலை வச்சுட்டு வந்தேன். போய் பார்க்கிறேன்.”
“ஆத்தா. இந்த கொக்கியைக் கொஞ்சம் போட்டு விடேன்.”
உள்ளேயிருந்து மகாலெட்சுமியின் குரல் கேட்க, தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.
வேறு எங்கும் பார்க்கத் துணிவில்லாமல், நேரே பேத்தியிடம் சென்றவள் அவள் போட்டுக் கொண்டிருந்த உடையை சரி செய்துவிட்டாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
>அடுப்பைப் பற்ற வைத்துப் பாலைக் காய்ச்ச ஆரம்பித்தாள். சிறிது நேரத்தில் மகாலெட்சுமிக்கும், அவளுக்கும் காபி கலந்து வந்து கொடுத்தாள்.
"அம்மா. நீங்க அப்படியே ஹால்ல உட்கார்ந்திருங்க.”
“ஏன்மா சும்மா உட்கார்ந்துக்கிட்டு. நான் காய் நறுக்கித்தர்றேன். இன்னும் என்ன செய்யனும்னு சொல்லு.”