இருவரும் பேசிக்கொண்டே சமையல் வேலையில் இறங்கினர்.
மகாலெட்சுமி மேனகாவின் மகள்களுடன் விளையாட ஆரம்பித்துவிட்டாள்.
சிவரஞ்சனிக்கு சென்று கொண்டிருந்த பாதை புதிதாக தெரிந்தது. ஓட்டுநர் அவளுக்குத் தெரிந்தவர்தான்.
“அண்ணா. உங்களுக்கு கவிதா வீட்டுக்கு வழி தெரியும்தானே?"
"தெரியும்மா."
"அப்புறம் வழி மாறிப்போற மாதிரி தெரியுதே.."
"கவிதாம்மா இருக்கிற வீட்டுக்குத்தான்மா போய்க்கிட்டிருக்கோம்."
"கவிதாம்மா இருக்கிற வீட்டுக்கா?"
"ஆமாம்மா. கவிதாம்மாவும், அவங்க வீட்டுக்காரரும் தனியா இருக்காங்க."
"பிரவு அண்ணாவோட அப்பா அம்மா எங்கே இருக்காங்க?"
"அவங்க பழைய வீட்டில்தான்மா இருக்காங்க."
"அப்படின்னா அவங்க இ
...
This story is now available on Chillzee KiMo.
...
ேசவில்லை.
என்ன செய்வதென்று அவள் திகைத்துக் கொண்டிருந்த வேளையில்தான் அவளது பெற்றோர் ஒருவர் பின் ஒருவராக இந்த உலகை விட்டு மறையவும் அவள் துடித்துப் போனாள்.
ஆறுதலுக்கு என்று கூட தாய் மடி கிடைக்காத துர்பாக்கியவதியாகிவிட்டேனே என்ற வருத்தத்தில் இருந்தவளுக்கு ஒரே ஆறுதல் கருப்பையாதான்.