ஆனால், அவனுக்கும் விபத்து நேர்ந்து அதன் பிறகு நடந்தது எல்லாம் பார்த்த பிறகு தாய் வீட்டு உறவே இல்லை என்றுதான் நினைத்திருந்தாள்.
வீட்டில் மாமியார் கணவனுக்கு இன்னொரு கல்யாணம் பண்ண வேண்டும் என்று பேச்சை ஆரம்பித்ததும் கணவன் உறவும் இனி தனக்கில்லை என்று தன் உயிரை விட முடிவு எடுத்தவளைக் கடைசி நேரத்தில் பார்த்துக் காப்பாற்றினான் பிரபு.
தன் தாயிடம் மனைவிக்காகப் பேசி சண்டை போட்டு தனிக்குடித்தனம் அழைத்து வந்துவிட்டான்.
அதை அவள் எதிர்பார்க்கவில்லை. பெரியவர்களின் மறைவு அவன் மனதில் ஒரு இளக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆனால் இது எத்தனை நாட்களுக்குத் தாங்கும்?
ஏற்கனவே இன்னொரு திருமணத்திற்கு மறுப்புச் சொல்லாமல் இருந்தவன்தானே? இப்போது யாருமில்லை என்று மனதில் இளக்கம் தோன்றியிருக்கிறது. இது நிலைக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
்க பார்த்துக்குவோம்னு அவங்களுக்குத்தெரியும். நீ எதற்கும் கவலைப்படாதே."
கவிதாவின் மாமனாரும், மாமியாரும் தயக்கத்துடன் உள்ளே வந்தனர்.
"ஏன்டா? எங்ககிட்டயும் இந்த விசயத்தை மறைச்சுட்டீங்களே?"
அவர்கள் பேச்சிலிருந்தே நடந்ததை எல்லாம் அவர்கள் கேட்டிருக்கிறார்கள் என்று புரிந்தது.