"நாங்க செய்ததெல்லாம் தப்புதான். எங்கே நம்ம வம்சம் தழைக்காமப் போயிருமோன்னுதான் அப்படி நடந்துக்கிட்டேன். அதற்காக நம்ம குடும்பத்து வாரிசு உருவானதைக் கூட எங்களுக்குச் சொல்லாமல் மறைப்பியா? உங்களுக்கு அங்க வர்றதுக்கு சிரமமா இருந்தால் சொல்லுங்க. நாங்களே இங்கே வந்துடுறோம். இனியும் எங்களை தனியா ஒதுக்கி வைக்காதே. இந்த மாதிரி நேரத்தில் நீங்க ஏன் அனாதை போல் இருக்கனும்."
"அண்ணா. அம்மா சொல்றதும் சரிதாண்ணா. இந்த மாதிரி நேரத்தில் பெரியவங்க கூட இருக்கனும். எல்லாத்தையும் மறந்துடுங்க. முதல்ல வீட்டுக்கு கிளம்புங்க."
"ஆமாங்க. வாங்க நம்ம வீட்டுக்குப் போவோம்."
கவிதாவின் மாமியார் சிவரஞ்சனியிடம் வந்தாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
{kunena_discuss:1222}