(Reading time: 12 - 24 minutes)

“எதற்காக அந்த பையன் கல்யாணத்தைத் தள்ளி போட்டானாம் பா.” என்று தனக்குத் தோன்றிய சந்தேகத்தைக் கேட்டாள் நிலா.

“தெரியல மா அதைப் பற்றி அவங்களும் சொல்லவில்லை நானும் கேட்டுகல. அது மட்டும் இல்லாமல் அது நாம கேட்க வேண்டிய கேள்வி இல்லனு எனக்கு தோனுச்சி. அதனால் தான் நிலா நான் ஏதும் கேட்கவில்லை” என்றார் சங்கர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

நிலாவிற்கு அவர் தந்தை கூறியது சரி என்று தான் பட்டது. தனக்குக் கல்யாணம் வேண்டாம் என்று கூற காரணம் இருப்பதைப் போல் அவருக்கும் அவருடைய காரணங்கள் இருக்கலாம். அதைக் கேட்பது நாகரிகம் இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவள் அமைதியாய் இருப்பதைப் பார்த்து “நான் வேணும்னா அடுத்த முறை கால் செய்யும் போது அதைக் கேட்டுப் பார்க்கிறேன்” என்றார் சங்கர்.

“இல்ல பா நீங்க சொன்னது சரிதான். அது நமக்குத் தேவை இல்லாத கேள்விதான்” என்றாள் நிலா.

அதை தெடார்ந்து அந்த இடத்தில் ஒரு அமைதி. அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் சங்கரும் நிலாவும் அமைதியாக இருந்தனர்.

அதுவரை அமைதியாக இருந்த சிவகாமி “நிலா இப்போ நீதான் சொல்லனும். எங்களைப் பொறுத்தவரை அவங்க நல்ல குடும்பமா தெரியுது. பையனும் நல்ல மாதிரி நு நினைக்கிறோம். உனக்கு பொருத்தமா இருப்பான். ஆனால் நீ சொல்ற முடிவை வைத்துத்தான் நாங்க மேற் கொண்டு பேசனும்” என்று நேராய் நிலாவிடம் கேட்டார்.

நிலாவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

தொடரும்

Episode # 05

Episode # 07

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.