(Reading time: 18 - 36 minutes)

அப்பா சொன்னது போல காதல் தப்புயில்ல.. ஆனா சரியில்லாத காதல் ரொம்ப தப்பு..

நான் ஏன் இதை உடனே காதல்ன்னு நினைக்கணும்.. இன்னும் எனக்கு எவ்வளவு நாட்கள் இருக்கு.. அதில்ல தெரிய போகுது இது காதலா.. இல்ல ஈர்ப்பான்னு.. பாக்கலாம்.. இந்த மனுகூட தான் அவன் குப்பை கொட்டனும்ன்னு இருந்தா.. அவன் தலையொழுத்தை யார் மாத்த முடியும்.. தன்னுள் தெளிவுடன் உறங்க ஆரம்பித்தாள் மனு..

சரியாக மாலைவேளையில் அபி சொன்னது போல அனைவரும் ஒன்றாக இணைந்தனர்..

எல்லாரும் வந்துட்டாங்க மச்சா.. இந்த ஓட்டவாயத்தான் காணம்.. எங்க போனா மச்சா..

நான் அவளை தூங்க சொன்னேன்.. கொஞ்ச நேரம் கழிச்சு தூங்கரன்னு சொன்னா.. அப்பரம் வேளை இருந்தது நான் அவளை பாக்கல மச்சி..

அந்த கும்பகர்ணி இன்னும் தூங்கிட்டு இருக்காளோ..

நான் ஒன்னும் உன்ன மாதிரி இல்லடா தகரடப்பா.. என அங்கு வந்தாள் மனு..

ஓட்டவாய் செல்லம்.. நீ தூங்களையா..

அது.. அது.. தூக்கம் வர்ல.. அதான் கொஞ்சநேரம் வீட்டுக்கு பேசுனேன்.. ஆமா ஆகா.. நீ காவிகிட்ட பேசுனீயா..

ஏன் என்ன ஆச்சு..

இல்ல சும்மா தான்.. என்கிட்ட இன்னும் அவ பேசல.. அதான்..

அம்மூ.. உனக்கு எதாவது தோணுதா..

ஏய்.. இல்லடா.. நான் சும்மா கேட்டேன்..

இல்ல நீ இதை என்கிட்ட இரண்டாவது தடவை கேக்கர.. எனக்கு..

அது எல்லாம் ஒன்னும் இல்லடா.. அவளுக்கு படிக்கர வேளை நிறையா இருக்குல்ல.. அதானல கூட இருக்கலாம்..

ஆனா அம்மூ.. நாம எல்லாம் இப்படி இல்லையே..

அதுக்கு நாம ஸ்கூலுக்கு படிக்க போயிக்கனும்.. கட் அடிச்சிட்டு ஊர்சுத்துனா இப்படி தான் ஒன்னும் தெரியாது..

சரி.. சரி.. நம்ம ரகசியம் எல்லாம் வெளிய வருது பார்.. வா செல்லகுட்டி காபி குடிக்கலாம்..

பயபுள்ள ஏன் பம்பர.. இல்லையே உன் நடவடிக்கை சரியில்ல போல.. ஐஸ்கிட்ட பேசனும் போல..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் " உன்னையே தொடர்வேன் நானே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

அம்மா தாயே.. நல்லா இருக்கர குடும்பத்துல கும்மியடிச்சராத.. அவ ஆட ஆரமிச்சா தாங்கமுடியாது.. முக்கியமா என்னால சமாளிக்க முடியாது தாய்.. தயவு பன்னி என்ன விடு சாமி.. தலைக்கு மேல கைகுவித்து வணங்கிவிட்டு.. நான் காபி கொண்டுவரேன்.. நீங்க பேசிட்டு இருங்க.. என நைஸ்சாக நழுவினான்..

போடா.. போ.. எஸ்சாகரீயா.. போ.. நைட் வச்சுகர..

யார் கர்ணி.. இந்த ஐஸ்..

அவ தான் என்னோட மருமகள்..

மருமகளா..

அட.. ஜித்து.. ஆகாவோட ஆள்..

உண்மையாவா..

அவனோட அத்தை பொண்ணு.. மாமா தான் அவன பாத்துகிட்டது எல்லாமே.. அது மட்டும் இல்ல.. அவங்க ரெண்டு பேருக்கும் மனசுக்கு பிடிச்சு போச்சு.. வீட்டுலையும் எல்லாருக்கும் சம்மதம்.. ரெண்டுபேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுகொடுத்து போவாங்க.. நான் அப்போ அப்போ அவங்கல வம்பிழுப்பேன்.. செமையா இருக்கும்.. ரொம்ப நல்ல பொண்ணு ஜித்து..

உண்மையா மச்சானுக்கு ஆள் இருக்கா..

ஏன் நீ இப்படி கேக்கர..

பாத்தா தெரியல்ல.. நீயும் மச்சானும் இவ்வளவு நெருக்கமா இருக்கரத அந்த பொண்ணு எதுவும் சொல்லலையா..

ஐஸ் மத்தவங்க மாதிரி இல்ல தெரியுமா.. எங்க உறவை அவ ரொம்ப அழகா புரிஞ்சுகிட்டா.. இன்னும் சொல்லனும்ன்னா.. என்ன ஆகாவ விட ஐஸ் தான் ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்கா.. சோ ஸ்வீட் தெரியுமா.. என்ன மாமி.. மாமின்னு சுத்தி வருவா..

அது என்ன மாமி..

மாமியாராம் நான் அவளுக்கு.. அதை செல்லமா மாமியாமா..

இது யார் கொடுத்த ஐடியா கர்னி..

நாங்க தான் ஜித்து சேர்ந்து யோசனை பன்னோம்..

நினைச்சேன்.. இப்படி எல்லாம்.. அபி முடிக்கும் முன்னே..

எங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் அற்புதமா யோசிக்கமுடியும்.. நீ எங்கல ரொம்ப பாராட்டர ஜித்து.. என அவள் குதூகளித்து சொல்லியவளை வினோதமாக பார்த்தான் அபி..

ஏய்.. ஆனா நீ ரொம்ப அழிசாட்டியம் பன்னர கர்னி..

ரொம்ப இல்லப்பா.. கொஞ்சமே கொஞ்சம்.. அவள் கண்ணை சுருக்கி.. கொஞ்சம் என்பதில் ஆள்காட்டிவிரலால் செய்தது.. உண்மையா நீ ரொம்ப அழிச்சாட்டியம் தான் பன்னர கர்னி என தன் மனதில் நினைத்துக்கொண்டான்.. ஆனா வெளியில்ல..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.