அதற்காக வெற்றியையோ அபியையோ பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லிவைத்ததில்லை..!! என்னவோ துளசியால் அத்தனை சுலபமாக தாரிகையுடன் இயல்பாக பேச முடிவதில்லை..!!
தாரிகைக்கும் அது புரிந்தே இருக்க.. துளசியைப் போலவே ஒரே எல்லைக்குள் அவளும்..!!
“நான் அம்மாவை கோயம்புத்தூர் கூட்டிட்டுப் போயிடலாம்னு நினைக்கறேன்..”, அனைவருக்கும் பொதுவாய் சமுத்திரா சொல்லிட..
“என்ன சொல்ற சமுத்திரா..?? அக்காவை நாங்க பார்த்துக்க மாட்டோமா..??”, ஆதங்கமாய் வெளிவந்தது கீதாஞ்சலியின் குரல்..
“அத்தை.. நான் உங்களையும் மாமாவையும் எல்லாரையும்தான் கோயம்புத்தூர் கூட்டிட்டு போகலாம்னு நினைக்கறேன்..”, தனது எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தாள் சமுத்திரா..
“எனக்கும் அதே எண்ணம்தான் சமூம்மா..”, இது செல்வி..
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் தாரு.. எங்களுக்கு என்ன கொறச்சல்.. கைகால் எல்லாம் நல்லாத்தானே இருக்கு.. ஒன்னும் பிரச்சனை இல்லை..”, கீதாஞ்சலி சொல்ல..
“உங்களுக்கெல்லாம் வருஷம் போச்சுன்னா வயசு கொறையுது நெனப்போ..?? ஐம்பதை தாண்டியாச்சு.. வேணுங்கறதைவிட சம்பாரிச்சாச்சு.. இனி யாருக்காகவும் மாஞ்சு மாஞ்சு சம்பாரிக்கனும்னு அவசியம் இல்லை.. ரெஸ்ட் எடுக்கலாம்..”
“அது இல்லை தாரு.. எங்களுக்கு இங்கயே நல்லா இருக்கு..”
“ப்ச்.. சும்மா சாக்கு சொல்லாதம்மா.. இன்னும் ஒரு மாசமோ ரெண்டு மாசமோ.. வெற்றி மாமா வீடும் அபி படிப்புக்காக அங்க வரப்போறாங்க.. நீங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ண போறீங்க.. நான் அப்பாட்ட பேசறேன்.. எல்லாரும் அங்கயே போயிடலாம்..”, அதற்கு மேல் பேச்சு எதுவும் இல்லை என்பதாய் அடுத்த வேலையை கவனிக்கச் சென்றிருந்தாள் செந்தாரிகை..!!
உருவெடுப்பாள்..!!
{kunena_discuss:1168}