(Reading time: 16 - 32 minutes)

இந்த சாரெல்லாம் வேணாம் ஆத்விக்கு மாதிரியே எனக்கும் நீங்க மச்சான்தான்..”,என்றவன் அவரை உள்ளே அழைத்துச் சென்றான்.அங்கு ஜீவிகாவ தயாராய் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்திருந்தாள்.

அதான யாரு எப்படி போனாலும் உன் வேலையை கரெக்டா பாப்பியே

ரொம்ப பேசாம வந்து கொட்டிக்கோ வா..செம பசில இருக்கேன்..”

மச்சான் இவ சாப்டே உங்க சொத்தை அழிச்சுருவா..வெரி டேன்ஜரஸ்.”

என்ன ஆத்வி பண்றது கழுதைக்கு வாக்கப்பட்டா உதை பட்டு தான ஆகணும்”,என்று அவன் முடித்ததுதான் தாமதம் ஆத்விக் குடித்துக் கொண்டிருந்த தண்ணீரை அப்படியே துப்பியிருந்தான்.ஜீவிகாவோ தன்னருகில் இருந்த கரண்டியை தூக்கி ஜெயந்தின் புறம் எறிய அவன் லாவகமாய் நகர்ந்து கொண்டான்.

ரேஷ்வாவோ கண்ணில் கண்ணீர் வரும்வரை சிரித்தான்.கரண்டி விழுந்த சத்தத்தில் அங்கு வந்த சமையல்கார பெண்மணி அனைவரையும் வாஞ்சையாய் பார்த்திருந்தார்.

இன்னைக்கு தான் இந்த வீடு உயிர்ப்பா இருக்கு தம்பி..நீங்க நல்லாயிருக்கணும்..”,என்று மற்ற மூவரையும் பார்த்து கூறிவிட்டுச் சென்றார்.

ஜீவியும் ஆத்விக்கும் எதோ உரையாடிக் கொண்டிருக்க ரேஷ்வா ஜெயந்திடம் பேசிக் கொண்டிருந்தான்.

எப்படியிருக்கு மேரேஜ் லைப்..இட்ஸ் டூ எர்லி பார் திஸ் கொஸ்டியன்..ஆனாலும் கேக்கணுமே!”

ரொம்ப நல்லா இருக்கு..ஜீ மாதிரி ஒரு ஜாலி கரேக்டரை வச்சுட்டு நல்லா இல்லாம இருக்குமா சொல்லுங்க.எங்க அம்மா அப்பாவே சொல்றாங்க அவ வீட்ல இல்லனா வீடு வெறிச்சுனு இருக்காம்”,என்றவன் புன்னகைத்தான்.

அது கரெக்ட் தான்.ஆனா மச்சான் ஒருதடவைனாலும் நா மனசுல நினைச்சத சொல்றேன்.நீங்களும் உங்க பேமிலியும் கூட ஜீயோட அம்மா மாதிரி கொஞ்சம் ஸ்ட்ரிக்டா இருப்பீங்களோனு நினைச்சேன்.”

புரியுதுங்க..அப்பா அம்மாக்கு பொண்ணு இல்லாத குறையை மருமகளை வச்சு தீத்துக்க நினைச்சாங்க சோ அவங்க எப்படிபட்ட பொண்ணு வந்தாலும் பாசமா பாத்துக்கணும்னு தான் நினைச்சுருந்தாங்க.

அது ஜீவிகாவா இருக்கும்போது கேட்கவே வேணாம்.எனக்குமே பெரிசா எந்த எதிர்பார்ப்பும் இல்ல.அதே நேரம் ஜீவிக்கு என்னை பிடிக்குமோ இல்லையோனு தான் தயக்கம் இருந்தது அவ வந்த அன்னைக்கே அதையும் உடைச்சு எறிஞ்சுட்டா..

சுருக்கமா சொல்லனும்னா எங்க வீடே இப்போ ஜீவிகா ஆர்மியோட மெம்பர்ஸ்..”,என்றவன் சிரிக்க ரேஷ்வாவிற்கு ஏனோ ஒரு நிறைவான உணர்வு எழுந்தது.

என்னை விட்டு அங்க என்ன ரகசியம் பேசுறீங்க ரெண்டுபேரும்?”

ஜீவிகா ஆர்மி பத்தி சொல்லிட்டு இருக்காரு மச்சான்.”

அடக் கொடுமையே ஏன் மச்சான் ஏன்..இவளையெல்லாம் சும்மாவே கையில பிடிக்க முடியாது இதுல இது வேறயா

உனக்குதான் டா என் அருமை தெரில இப்போ பேசினதை வீட்டு பக்கம் வந்து என் அத்தைகிட்ட சொல்லிராத உன்னை நாலா வகுந்து உப்பு காரம் போட்டு மொட்டைமாடில காய வச்சுருவாங்க தெரிஞ்சுக்கோ!”

கொலைகார கூட்டமா இருக்கும் போலயே மச்சான் எதுக்கும் நா உங்களை இப்படி வெளிலேயே மீட் பண்ணிக்குறேன்.”

ஹா ஹா ஆமா நானே உங்களை சிறப்பா கவனிக்கனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.என்னைப் பத்தி கடைக்கெல்லாம் வந்து விசாரிச்சீங்களாமே?!”

அடிக் கிராதகி போட்டு கொடுத்துட்டியா??!”

அப்படியில்ல மச்சான்..ஜீ க்கு அண்ணாவோ தம்பியோ இருந்து இருந்தா அவங்க இதெல்லாம் பண்ணிருப்பாங்க தான.ஆன்ட்டி நல்லா விசாரிச்சு தான் முடிவெடுத்துருப்பாங்க இருந்தாலும் எங்க திருப்திக்கு நாங்க செக் பண்ணிக்கிட்டோம்.”

சும்மா  விளையாட்டுக்குதான் கேட்டேன் ஆத்வி..அவ சொன்னப்போவே உங்க எண்ணம் இதுவா தான் இருக்கும்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது.”

மச்சான்  நீங்க சொல்லுங்க எங்களைப் பத்தி சொன்னப்போ நீங்க என்ன நினைச்சீங்க உண்மையை சொல்லணும்!”

ஆத்வி வந்து விஷ் பண்ண விதத்துலயே அவங்க ப்ரெண்ட்ஷிப் புரிஞ்சுக்க முடிஞ்சுது.உங்களைப் பத்தி தான் ஒண்ணுமே சொல்லல.இப்போ கார்ல வர்றப்போ தான் நீங்க யாருனே சொன்னா.

நட்பு எப்பவுமே ரொம்ப நல்ல ஒரு விஷயம்.எனக்கு ஸ்கூல் டைம்க்கு அப்பறம் பெருசா நட்புனு யாரும் கிடையாது.வியாபாரம் கஸ்டமர் டீலர்ஸ்னு டைம் போகுது.நேர்மையான நெருக்கமான நட்புனு யாரும் இல்ல.

அதனாலயே இது எனக்கு பிடிச்சதுனு தான் சொல்லனும்.அதுவும் ஜீவியோட நேச்சர் தெரிஞ்ச அப்பறம் இதுல தப்பா எடுத்துக்க ஒண்ணுமேயில்ல.அவளால யாருக்கும் கஷ்டமும் வராது.அவளை கஷ்டபடுத்தவும் யாருக்கும் மனசு வராது

அவன் பேசியவாறே ஜீவிகாவைப் பார்க்க அவளோ கன்னத்தில் கை வைத்தவாறு அவனையே பார்த்திருந்தாள்.சங்கடமாய் ஜெயந்த் நெளிய அவளோ எந்த கவலையுமின்றி அப்படியே அமர்ந்திருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.