(Reading time: 16 - 32 minutes)

ஹலோ!!மிஸஸ் ஜீ இங்க கல்யாணம் ஆகாத சின்ன கன்னி பசங்க நாங்க ரெண்டு பேர் இங்க இருக்கோம் நியாபகம் இருக்கட்டும்.”

கல்யாணம் ஆகலனு வேணா சொல்லு சின்ன பசங்கனு எல்லாம் சொல்லாத டா..ஏற்கனவே அரைக் கிழவனுங்க நீங்க ரெண்டு பேரும்.வளர்ந்துருக்கியே ஒழிய அறிவே இல்ல..என் புருசர் என்னை பத்தி ரொமான்டிக்கா சொல்றத கேட்டு நா காதல் ரசத்தை பிழிஞ்சுட்டு இருக்கேன்.கொஞ்சமும் கூச்சமே இல்லாம உக்காந்து வாய் பார்த்துட்டு இருக்க..வர வர கொஞ்ம் கூட பொறுப்பே இல்ல ஆத்வி உனக்கு..”

இது வேறயா எல்லாம் என் நேரம்..நீயாச்சு உன் காதல் கணவராச்சு வாங்க ரேஷ் நாம போகலாம்.”

ஐயோ ஜீவி போதும் கொஞ்ம் அடக்கி வாசியேன்.”

ம்ம் என் மாம்ஸ் சொல்றதுனால உன்னை சும்மா விடுறேன்.பொழச்சுப்போ..சரி சொல்லு உன் காதல் சோக கீதத்தை என்ன தான் சொல்றா நம்ம ஷான்.”

இப்போ ஏன் ஜீ அதைப்பத்தி பேசிகிட்டு..”

ரொம்ப பண்ணாத டா எரும என்னாச்சுனு சொல்லு..சொல்ல முடியாது என் மாம்ஸ் கூட நல்ல ஐடியா எதாவது குடுப்பாங்க..”

ரேஷ்வாவும் ஜெயந்தும் என்னடா நடக்குது இங்க என்ற ரீதியில் இருவரையும் பார்த்திருந்தனர்.

ரெண்டு பேரும் ஏன் இப்படி ஒரு பார்வை பாக்குறீங்க!பயபுள்ள ஏற்கனவே சோகத்துல இருக்குல.நம்ம ஆத்வி செல்லம் கொஞ்சமா தைரியம் வந்து அவன் ஆள்ட்ட தன்னோட லவ்வை சொல்லிட்டான் ஆனா அந்த பொண்ணு நோ சொல்லிட்டா அதான் இந்த சோக கீதம் இப்போ

என்ன டா.. ஜீ சொல்றது உண்மையா?”

ஆமா ரேஷ் அவ பேசினதெல்லாம் கேட்டு ரொம்ப கஷ்டமா போச்சு.”,என்றவன் அவள் கூறிய அனைத்தையும் கூறினான்.

ஜெயந்தும் ரேஷ்வாவும் என்ன செய்வதென யோசனையில் இருக்க ஜீவிகாவோ,

ஏன் டா ஆள் தான் வளர்ந்துருக்கியே தவிர அறிவு வளரவே இல்ல.அவ தான் இவ்ளோ க்ளியரா சொல்லிட்டாளே. நீ கரெக்ட் பண்ண வேண்டியது அவளை இல்ல அவங்க அப்பாவை.”

ஐயையே எனக்கு அவ்ளோ மட்டமான டேஸ்ட் எல்லாம் இல்ல ஜி

எரும இப்படி பேசிகிட்டு இருந்தா சாமியாரா தான் போகணும்..நா சீரியஸா பேசிட்டு இருக்கேன்.மாமனாரை பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணு அவரை வழிக்கு கொண்டு வந்தா தானா உன் ஆளு உன்னை ஏத்துப்பா..”

அப்படிங்குற?!”

ஆமாங்குறேன்..”

எல்லாம் நல்லாதான் இருக்கு.. ரெண்டு பேரும் எங்கேயும் போய் தர்ம அடி வாங்காம இருந்தா சரி..”

மாம்ஸ் இப்படி ஆரம்பிக்குறதுக்கு முன்னாடியே அபசகுணமா பேசலாமா..வாய்ல அடிச்சுக்கோங்க..”

டேய் ஆத்வி இப்போ தான் டா மறுபடியும் நடிக்க ஆரம்பிச்சுருக்கேன்.அடி வாங்கி வெளில தெரிஞ்சா ரொம்ப அசிங்கமா போய்டும் டா..”

ரேஷ் நீங்களுமா??”

ஹா ஹா சும்மா சும்மா..நீ மாமனாரை கரெக்ட் பண்ற.. ஷான்யாவை கல்யாணம் பண்ற..அதுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் நா பண்றேன்..”

கேக்கவே கொஞ்சம் நாராசமா இருக்கு இல்ல??”

ஹா..பாத்துக்கலாம் டா ஆத்வி கண்ணா..ஆனா ஒரு விஷயத்தை மட்டும் மறந்துறாத நீ கல்யாணம் பண்ண வேண்டியது ஷான்யாவை தான்.நீ பாட்டுக்கு மாமனாரைதான் லவ் பண்றேன்னு வந்து சொல்றாத

அடிங் இதோ வரேன் இரு டி”,என்றவன் துரத்த ஜீவிகா அவனிடம் அகப்படாமல் ஓட ஆரம்பித்திருந்தாள்.

தொடரும்...

Episode # 08

Episode # 10

Go to Unnodu naanirukkum manithuligal story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.