“நானும் அதை அறிவேன் வீரரே. என்னை என்னால் காத்துக் கொள்ள முடியும். அத்தோடு பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் விழாவில் எனக்கு யாரால் ஆபத்து ஏற்படும்?
“தாங்கள் மஹாராணாவின் பிரியத்திற்குரிய மகள் என முஹலாய அரசர் அறியும் பட்சத்தில் தங்களை வைத்து ரானாவைப் பிடிக்க முயற்சி செய்யலாமே.”
“மகாராணாவைப் பிடிப்பது அத்தனை எளிதா என்ன? அதிலும் என் மூலம். அப்படி ஒரு நிலை வரும் பட்சத்தில் என்னுடைய மூச்சுக் காற்றுக் கூட அவரைக் காட்டிக்கொடுக்காது”
“தங்களைக் குறை சொல்லவில்லை இளவரசி. ஆனால் தாங்கள் ஒரு பெண். முஹலாய மன்னர் பெண்கள் விஷயத்தில் சரியில்லாதவர். அந்த வகையில் தங்களுக்குக் கெடுதல் செய்தாலும் மகாரானாவிற்கு இழுக்குத் தானே”
“அப்படி அந்த மன்னரிடம் பிடிபட்டால் அவர் அன்றைக்கு நம் இந்தியப் பெண்களின் கற்பு நெறியையும், அதைக் காத்துக் கொள்ளும் வீரமும் பற்றிய பாடத்தை உணர்ந்து கொள்வார்”
கடைசி வரிகளைச் சொல்லும்போது அவளின் கண்களில் வீசியக் கனலைக் கண்ட ப்ரித்விராஜ், இளவரசியின் இந்த விஷயத்தில் அவர் அதிகம் சிந்தனை செய்திருக்கிறார் என்று புரிந்து கொண்டான். என்றாலும் பிரிதிவிராஜ் அத்தனை சுலபத்தில் ஒத்துக் கொள்ளவில்லை. மேலும் அந்தத் திருவிழாவிற்கு இன்னும் நாட்கள் இருப்பதால் பின் இதுப் பற்றிப் பேசலாம் என்று கூறவே, கிரண் தேவியும் சற்று அமைதியானாள்.
ஆனால் இளவரசியின் எண்ணப் படி அந்த விழாவிற்கு யாரும் அறியாதபடி செல்லப் போவதையும், அங்கு ஏற்படும் சிக்கல்கள் பற்றியும் இன்றைக்கு இருவருமே உணரவில்லை.
தொடரும்!