தொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 12 - ஸ்ரீ

“உந்தன் கை விரல் பிடிக்கையில்
புதிதாய் நம்பிக்கை பிறக்குது
உந்தன் கூட நடக்கையில்
ஒன்பதாம் திசையும் திறக்குது
என் பயணத்தில் எல்லாம் நீ
கைக்காட்டி மரமாய் முளைத்தாய்
என் மனதை உழுது
நீ நல்ல விதைகளை விதைத்தாய்
என்னை நானே செதுக்க
நீ உன்னையே உலியாய் தந்தாய்
என் பலம் என்னவென்று எனக்கு
நீ இன்றுதான் உணர வைத்தாய்
கிழக்கே பார்த்தேன் விடியலாய் இருந்தாய் அன்பு தோழி
என் ஜன்னலின் ஓரம் தென்றலாய் வந்தாய் அன்பு தோழி”
மற்ற நாட்களை விட உற்சாகமாய் இருந்தான் ரேஷ்வா.இரு நாட்களாய் அங்குமிங்கும் அலைந்து திரிந்த களைப்பு கூட இருக்கவில்லை அவனிடத்தில்.
“ரேஷ் செம எனர்ஜில இருக்கீங்க போலயே!”
“உண்மைதான் ரினி ஐ அம் சோ ஹேப்பி..லைப்ல மேஜிக் எப்போ நடக்கும்னு யாருக்கும் தெரியாது.அதை இப்போ ஒவ்வொரு நாளும் நான் உணர்ந்துட்டு இருக்கேன்.”
“கரெக்ட் தான் உங்களை இப்படி பார்க்குறதுக்கு சந்தோஷமா இருக்கு..”,அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஜீவிகாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது அமைதியாய் இருக்கும்படி செய்கை காட்டிவிட்டு அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டுவிட்டான் ரேஷ்வா.
“ஹலோ ஜி!!”
“பார்ரா நேத்து தான் எங்கே நிம்மதி சிவாஜி கணேசனா இருந்தீங்க இன்னைக்கு என்ன அப்படியே உல்டா வா இருக்கு?”
“ஹலோ மட்டும் தான சொன்னேன் அதுக்கே வா?”
“அதுலயே இவ்ளோ தெரியுதுனா பாருங்க அங்க பக்கத்துல இருக்குறவங்களுக்கு எல்லாம் கண் கூசும் போலயே!”
“ஹா ஹாஹா ..”
“பார்த்து ரேஷ் சார் ஹிரோயின் உங்க அழகுல மயங்கிடபோறாங்க..நீங்க சுமாரா தான் இருப்பீங்க பட் இப்படியெல்லாம் சிரிச்சா கொஞ்சம் பாக்குற மாதிரி இருப்பீங்க..அதை பார்த்து அந்த பொண்ணு ஏமாந்துற போகுது..”
“இப்போ நீ என்னை கலாய்க்குறதுக்கு தான் கால் பண்ணியா?”
“ஐயோ ச்ச இல்ல இல்ல எப்போ ஊருக்கு போறீங்க அம்மாவை பாக்குறதுக்குனு கேட்கலாம்னு பண்ணேன்.நேத்து க்ளாஸ்க்கு போற அவசரத்துல ஒழுங்கா பேச முடில..”
“நா ஆல்ரெடி ஊருக்குப் போய் அம்மாவை பாத்துட்டு அகெயின் ஷுட்க்கு வந்துட்டேன்..”
“அடப்பாவி யோவ் இதெல்லாம் சொல்றதில்லையா எவ்ளோ அக்கறையா நா பேசிட்டு இருக்கேன்.”
“இல்ல ஜி சும்மா தோணிச்சு அதான் உடனே போய்ட்டு வந்துட்டேன்.அம்மா நிறையவே பேசினாங்க நானும் தான்..மனசு ரொம்பவே லைட்டா இருக்கு..தேங்க்ஸ் டு யூ ஜி..”
“யாருக்கு வேணும் உங்க தேங்க்ஸ்..ஒழுங்கு மரியாதையா ட்ரீட் வேணும்”
“சரி அப்போ டெல்லி வா இப்போவே செம ஹோட்டலுக்கு போலாம்..மச்சானையும் கூட்டிட்டு வா..”
“எப்படி எப்படி நீங்க போடுற ஒரு வேளை சாப்பாட்டுக்கு நா 10000 ரூபாய் செலவு பண்ணி வரணுமா?அதுவும் அந்த ஒரு வறட்டு சப்பாத்தி சாப்பிட…நாலு நாள் சாப்பிடாம பட்டினி கிடந்து செத்தாலும் சாவேனே தவிர சப்பாத்தியை கையால தொட மாட்டேன்..”
“ஜி காலையிலேயே ஃபுல் ஃபார்ம்ல இருக்கியே மா..”
“ஆமா இன்னைக்கு எல்லாருமா சேர்ந்து மொக்கை கொடுத்துட்டாங்க வீட்ல..வர வர என்னைவிட மோசமா போய்ட்டு இருக்காங்க என் மாமனாரும் மாமமியாரும்”,என்றவள் தான் சமையல் செய்த கதையை பற்றிக் கூறிக் கொண்டிருந்தாள்.
அதை கேட்டுக் கொண்டிருந்த ரினிஷாவோ சட்டென சத்தமாய் சிரித்துவிட ஜீவிகாவோ,
“யோவ் ஹீரோ என்ன லேடி வாய்ஸ்ல எல்லாம் சிரிச்சு வெறுப்பேத்துறீங்க..எவ்ளோ பீல் பண்ணி சொல்லிட்டு இருக்கேன்.”
“ஹா ஹா ஹாய் ஜீவிகா..”
“ஹலோ..நீங்க??”
“உங்க ஹீரோ சாரோட டெல்லி ப்ரெண்ட் ரினிஷா..”
“காலக்கொடுமை என் மானத்தை வாங்கிட்டாரே..ரேஷ் சென்னை வரும்போது சொல்லுங்க சிறப்பா கவனிக்குறேன் இதுக்காகவே”
“ஐயோ ஜீ அவர் பாவம் ஒண்ணும் பண்ணாதீங்க என்னையும் உங்க கேங்க்ல சேர்த்துக்க மாட்டீங்களா?”