ஆனா ஒண்ணு அத்தை இனி வரும் இளைய சமுதாய சீரழிவுக்கு காரணம் சத்தியமா பெத்தவங்களா பிள்ளைங்களானே சொல்ல முடில..ஏனோ இந்த மாதிரி விஷயத்தெல்லாம் கேள்விப்பட்டா மனசு டபடப்பா இருக்கு..”
“அட நீ ஏன்ம்மா உன்னை போட்டு கஷ்டப்படுத்திக்குற..போ போய் ப்ரெஷ் ஆய்ட்டு வா..”
“ம்ம் சரி அத்தை இதோ வரேன்..”,என்று எழுந்தவளுக்கு ஏனோ அந்த விஷயம் அத்தனை எளிதில் மனதை விட்டு நீங்கும் என தோன்றவில்லை.
ஆத்விக்கோ எதையோ பறி கொடுத்தவனாய் தனதறையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருந்தான்.மதிய உணவு இடைவெளி நேரத்தில் ஷான்யா அவனைத் தேடி வந்திருந்தாள்.
“சார்..”
“??!”
'எனக்கு ஒரு ஹாஃப் டே லீவ் வேணும்..”
“முக்கியமான மீட்டிங் எதுவும் இல்லை தான?அண்ட் பெண்டிங் இல்லாம எல்லா வேலையும் முடிச்சுட்டீங்கனா தாராளமா லீவ் எடுத்துக்கோங்க..”
“எல்லாம் முடிச்சுட்டேன் சார்..தேங்க் யூ..”
“இஃப் யூ டோண்ட் மைண்ட் எதுவும் பிராப்ளம் இல்லையே?”
“அதெல்லாம் இல்லை.இன்னைக்கு என்னை பொண்ணு பார்க்க வராங்க அதான்..”
“!!!!!!!”
“நான் கிளம்பலாமா?”
“இப்போ இங்கிருந்து போறதுக்கு கேட்குறியா?இல்ல மொத்தமா என் வாழ்க்கையை விட்டு போறதுக்கா?”
“…..”
“சாரி ஏதோ தோணிச்சு கேட்டுட்டேன்..அப்போ உன் ஐ ஏ எஸ் கனவு?”
“ம்ம் அது எப்பவுமே கனவா மட்டும் தான் இருக்கும் போல..அப்போ சொன்னதுதான் இப்போவும் சொல்றேன்..இதெல்லாம் மறந்துருங்க..எனக்கான வாழ்க்கைங்கிறது என் அப்பா எடுக்குற முடிவுல தான் இருக்கு..அதை மீறக் கூடிய தைரியமும் எனக்கு கிடையாது..அதை ஏத்துக்குற பக்குவமும் அவருக்கு கிடையாது..உங்களை கஷ்டப்படுத்திருந்தா மன்னிச்சுருங்க..”,என்றவள் நிற்காமல் சென்றுவிட்டாள்.
அதையே நினைத்திருந்தவனுக்கு அவளின் நிலைமையும் பாவமாய் தோன்றியது.இருதலைக் கொள்ளி எறும்பாய் வருத்தப்படுகிறாளோ என்றே எண்ணிணான்.அந்த கண்களில் ஜீவனே இல்லாமல் இருப்பதாய் தோன்றியது.எதாவது செய்தாக வேண்டும் ஆனால் என்ன செய்வதென தெரியவில்லை.வாழ்வில் ஒரு கட்டத்தில் கடவுளை நம்புவதை தவிர வேறு வழியில்லை என்றாகுமே அப்படிபட்ட நிலைதான் தனக்கும் இப்போது என்று உணர்ந்திருந்தான் ஆத்விக்.
தொடரும்...