(Reading time: 9 - 17 minutes)

வைத்தியர் தேவையான மருந்துகளோடு வந்து அவனுக்கு வேண்டிய சிகிச்சை அளித்தார்.

அதற்குள் நடந்தவையனைத்தும் சிவகங்காவதியின் காதுகளை எட்டியிருக்க தன்னவனை காண்பதற்காக வேகமாய் அங்கு வந்திருந்தாள்.

ஒன்றுமில்லை கங்கா.பயப்படாதே

அவர் இப்போது எங்கு இருக்கிறார்?”

சிறைப்பிடித்து வைத்திருக்கிறேன்

தாங்கள் கலக்கம் கொள்ள வேண்டாம்.அனைத்தும் விரைவாக சரியாகிவிடும்.”

கலக்கம் என்பதை விட மனிதர்களின் முகமூடிகளைப் பற்றி அறியாமலே இருந்திருக்கிறேனே என்ற வருத்தம் தான்.மத குரு அவர்களை என் தந்தைக்கு நிகராக நினைத்திருந்தேன்.

எனைப்பற்றி அறிந்திருந்தும் அவன் இப்படி ஒரு வழியில் வளர்வதற்கு காரணமாகி விட்டாரே.என் வாப்பா செய்த நன்மை தீமைகளில் எனக்கும் தானே பங்குண்டு.அப்படியிருக்க எங்கணம் அவனை ஏற்காமல் போயிருப்பேன்.

என் பிறவி முழுமைக்குமான பாவத்தை என்னிடம் சேர்த்துவிட்டாரே!”

இஷான் தங்களின் நல்ல மனதிற்கு எதுவும் தவறாக நடக்காது.உங்கள் தமையனிடம் பொறுமையாக பேசிப் பார்க்கலாம்.அவர் நிச்சயம் தங்களை புரிந்து கொள்வார்.”

எனக்கு நம்பிக்கையில்லை கங்கா.ஏனெனில் அவன்பட்ட காயம் அத்தகையது அதற்கான பலனும் அவன் பெரிதாய் தான் எதிர்பார்ப்பான்.பார்க்கலாம் என்னால் முடிந்தவரை அவனுக்கு தீமை செய்ய மாட்டேன்.ஆனால் மீண்டும் அவன் உனக்கும் எனக்கும் எதிரியாகத்தான் நிற்பான் என்றால் சற்றும் யோசிக்காது அவன் சிரத்தை வெட்டி வீழ்த்திவிடுவேன்.”,என்றவனின் கண்களின் தீவிரம் பல செய்திகளை உணர்த்தியது சிவகங்காவதிக்கு

அடுத்த அத்தியாயத்துடன் நிறைவுப்பெறும்

Episode 18

Episode 20

Go to Sivagangavathi story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.