“போலீசில் சொல்லிவிடலாமே சார். அவங்க இங்கேயே அந்த ஆளை அரெஸ்ட் செய்து விடுவார்களே” என்றுத் தயக்கத்துடன் கேட்டாள்.
“நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் சம்பந்தப் பட்டவங்க புகார் அளிக்காமல் ஒன்றும் செய்ய முடியாது. அத்தோடு உங்கள் பெரியப்பாவிற்கு நீ போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் போக வேண்டாம் என்ற எண்ணமும் இருந்து இருக்கலாம்.” என்றான்.
“ஹ்ம்ம் .” என்று அரை குறையாகச் சொல்லியவள், பிறகு, தன்னுடைய இடத்திற்கு செல்ல ஆயத்தமானாள்.
“ஹேய், சொல்லு உனக்கு என்னப் பிரச்சினை? “
“எனக்குக் கொஞ்சம் உங்ககிட்டே விரிவாப் பேசனும். நாளைக்குப் ப்ரீயா இருப்பீங்களா? “ என்றுக் கேட்டாள்.
“இப்போதே பேசலாமே “ என்று அவன் பதில் சொல்லவும்,
“இல்லை பிரின்ஸ், நாளைக்கே இதைப் பற்றிப் பேசலாம்” என்று கூறிவிட்டு அவள் அறைக்குச் சென்றுப் படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, அவள் கனவு தொடர ஆரம்பித்தது.
“ராணியின் உடையை முள் செடியில் இருந்து லாவகமாக எடுத்து விட்டவன், அவளின் நன்றி அறிவிப்பில் நிமிர்ந்து அவளைப் பார்த்தான் . பூரண நிலவின் அழகைக் கொண்டு இருந்த அந்த முகத்தில் தான் எத்தனை தேஜஸ், என்று எண்ணிக், கொண்டபடி நிமிர, அப்போதுதான் தான் முகம் மறைக்கும் துணி விலகி இருப்பதைக் கவனித்தாள் கிருத்திகா.
ஐயோ , இளவரசர் என்ன நினைக்கிறாரோ என்ற எண்ணத்தோடு அவரைப் பார்க்க, பிகானர் இளவரசனோ ராணியின் முகத்தில் இருந்து தன் பார்வையை திருப்ப முடியாமல் தவித்தான்.
தொடரும்!