இல்லனா.... அவங்க கிட்ட எதுவும் சொல்ல நீ அண்ணி கண் முழிக்கும் வரை கொஞ்சம் பத்தரமாவே இரு.
டேய் ஏன் டா பயம்புருத்தப் பாக்குற அவங்க வீட்டில் எல்லாரும் ரொம்ப சாஃப்ட் என்றான் ஈஷ்வர்.
ஓஹோ எற்று நக்கல்லடித்தான் நக்ஷ்
அதர்குள் தாத்தா அமரையும் பார்வதியையும் அருகே அழைத்து தான் சீரியஸாக இருந்த நிலையில் மருத்துவம் பார்க வராமல் அடம் பிடித்தே சிங்ரிஷ்ஷீடன் இந்த கல்யாணத்தை நடத்தியதாகவும் எல்லாம் நன்மைக்கே என்று தாத்தா விளக்கம் அளித்தபடி இருக்க.. சொல்லிக்கொண்டே இருந்தவர் பேட்சை நிருத்தி விட்டார்
மட மட என்று உள்ளே வந்த ஒருவன் ஈஷ்வர்ரின் சட்டையை பிடித்து இழுத்து கண்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்... அவள் கழுத்தில் தாலி கட்டும் அளவுக்கு உனக்கு தைரியம் யார் தந்தது... உன்னை இப்போதே கொண்று விடுகிறேன் என்று ஈஷ்வரின் சட்டையை பிடித்து சண்டையிட்டான்.... அவன் கோவத்திற்கு ஈஷ்வர் எந்த ஒரு ரியக்ஷனும் காட்டாமல் நீ யாரு டா புதுசா என்றான் அவன்சட்டையை பிடித்திருந்தவனின் கரங்களில் இருந்து உருவியபடி. அதர்குலாகவே குடும்பத்தின் அனைவரும் இவர்களை பிரிக்க வந்தனர். யாராவது கிட்ட வந்தீங்க அவ்ளோதான் என்று சிங்கமாய் கர்ஜித்தான் ஈஷ்வரை அடித்தவன்.
அவர் தான் வயதானவர் அவருக்கு புரியாது யாரு டா நீ ? உனக்கும் அளுக்கும் என்ன சம்மந்தம்? குட்டிமா எவ்வளவு வேதனைப்பட்டாளோ ஐயோ கடவுளே.... ஏன் டா அவளுக்கு என்னமா கஷ்டமா இருந்ததோ? என்று அவன் பாட்டிற்கு புளம்பினான்.
முதலில் யாரோ ஒருவன் தன்னை அடிக்கிறான் என்று கோவம் தான் ஆனால் அவன் தன்னவளின் மீது உள்ள பசத்தை இப்படி காட்டுகிறான் என்றதும் அவனை திருப்பி அடிக்கும் என்னத்தை கைவிட்டான். அவன் புளம்பவதில் அவன் பாசம் அப்பட்டமாக தெரிந்தது.
அமர் தன் மகனை சுய உணர்வுக்கு கொண்டு வந்து அவனை ஈஷ்வரிடம்மிருந்துப் பிரித்தார்.
அமரிடம்மிருந்து நகர்ந்து தாத்தாவின் அருகில் சென்றவன் அவளை எப்படிலாம் கொடுமை படுத்துனீங்க இந்த கல்யாணம் செய்து வைக்க என்றான் வரண்ட குரலில். -புதியவன்
அதை உன் தங்கச்சியை கேட்டுக்க என்று அவர் படுத்து விட்டார்.
அமைதியாக பௌவ்வின் அருகே சென்று அவள் அருகில் அமர்ந்தவன் குட்டிமா என்று அவளை அழைத்தான் புரண்டு படுத்தவள் கொஞ்சம் நகர்ந்து அவன் மடியில் தலை வைத்து அமைதியாக உரக்கத்தை கண்டிநியூ செய்தாள்.