Page 1 of 9
தொடர்கதை - ராணி... மகாராணி... - 17 - ராசு
"நீ இத்தனை சுயநலக்காரியாக இருப்பாய் என நான் நினைக்கவில்லை."
ராஜன் பாபு கோபத்தில் கூறவும் துடித்துப் போனாள் மகாராணி.
அவன் எதற்காக இப்படிக் கோபப்படுகிறான் என்று புரியாமல் திகைத்தாள்.
அதற்கும் அவள் மீதே கோபப்பட்டான்.
"என்ன முழிக்கிறே?"
"நான் என்ன தப்பு பண்ணேன்?"
"என்ன பண்ணலை? உனக்குத் தேவைன்ன உடனே மோனி மாதிரி இங்கே வந்துட்டே. இப்ப உன் தேவை தீர்ந்து போச்சு. அதனால் எங்களைப் பத்திக் கவலைப்படாம கிளம்ப முடிவு பண்ணிட்டே."
"இல்லை. அ ... ன் சொன்ன மாதிரி நிலாக்குட்டியின் காது குத்தும் வைபவம் இருக்கிறது. முன்பே அவளுக்குக் காது குத்த வேண்டும் என்று அவர்கள் திட்டமிடும்போது உமா மீண்டும் கருவுற்றாள். அதனால்
This story is now available on Chillzee KiMo.
...