“இப்போதைக்கு படம் எடுப்பது எனக்கு முக்கியமாக படலை. கடலின் ஆழத்தில் இருக்கும் மக்காத குப்பைகளை எப்படி அகற்ற முடியும், கடல் வாழ் உயிர்களை எப்படி காப்பாற்ற முடியும் என்பது பற்றி தான் என் சிந்தனை செயல் எல்லாமே இருக்கு. எனக்கு அதுக்கு கண்டிப்பாக நிறைய பொருள் தேவைப்படும். அதனால எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும்” சற்றே தயக்கத்தோடு தேன்மொழி கூறவும் அப்படி என்ன உதவி கேட்கப் போகிறாள் என்று அனைவரும் அறிய காத்திருந்தனர்.
“என் பேர்ல நீங்க நிறைய சொத்து வாங்கி வைத்திருக்கீங்களா அப்பா. அது எல்லாம் என்னோட பதினெட்டாவது பர்த்டே போது எனக்கு நீங்க பரிசாக கொடுக்க ப்ளான் செய்திருக்கீங்களா” மகள் கேட்கவும் இந்த விஷயம் இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நான் எதுவுமே சொல்லலை” தாத்தா தப்பித்துக் கொண்டார்.
“இளங்கோ அண்ணா ஆடிட்டர் மாமாகிட்ட பேசிட்டு இருந்ததை நான் தற்செயலாக கேட்டேன். அது பாப்பா சொத்து. எக்காரணம் கொண்டும் படத்திற்கு பைனான்ஸ் தேவை எனில் அதில் கை வைக்க மாட்டோம்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க” தேன்மொழி விளக்கம் கூறினாள்.
“ஆமா பாப்பா. நாங்க அப்படி தான் முடிவு செய்திருக்கோம். நாங்க எல்லோரும் சம்பாதிப்பது எல்லாமே உனக்கு தான் பாப்பா” கயல்விழி மகளிடம் கூறினார்.
“எனக்கு பதினெட்டு வயசு போது கொடுக்க இருக்கும் சொத்தை நான் என்ன வேணும்னாலும் செய்துக்கலாமா” தேன்மொழி சந்தேகம் கேட்க அனைவரும் ஏன் இப்படி ஒரு சந்தேகத்தைக் கேட்கிறாள் என்று புரியாமல் ஆம் என்றனர்.
“அப்போ இப்போவே அதை எல்லாம் எனக்கு தருவீங்களா. அந்த சொத்துக்களை எல்லாம் செந்தமிழ் பவுன்டேஷனுக்கு உபயோகம் செய்ய விருப்பப்படுகிறேன்” தேன்மொழி அவ்வாறு கூறவும் தான் அவளின் தீவிரத்தை அனைவரும் உணர்ந்து கொண்டனர்.
“பாப்பா உனக்கு பவுண்டேஷனுக்கு பணம் தானே வேணும். அதுக்கு எதுக்கு உன் சொத்தை எல்லாம் போடணும். அண்ணா மியுசிக் கான்சர்ட் நடத்தி மக்களிடம் அதற்கான நிதியை பெற்றுத் தரேன்” இளமாறன் கூறவும் தேன்மொழிக்கு மிகுந்த சந்தோஷம்.
“நாங்களும் சிறப்பு பேஷன் ஷோ நடத்தி உனக்கு நிதி திரட்டித் தரோம்” கயல்விழி , வானதி இருவரும் ஒருமித்துக் கூறினார்கள்.
“நம்ம கயல் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவரும் படங்களின் லாபத்தில் பாதி உனது பவுண்டேஷனுக்குத் தான். மீதியை எப்போதும் போல நம்ம நிறுவனத்தில் வேலை செய்யும்