(Reading time: 11 - 22 minutes)
Enakena yerkanave piranthavan ivano
Enakena yerkanave piranthavan ivano

அவளுக்கு உறங்கப் பிடிக்கவில்லை. அவள் mobileலில் இருந்து எதவாது சத்தம் வந்தாள் அவனா இருப்பானோ என்று எதிர் பார்த்து ஏமாந்து போனாள்.

அன்று இரவு ரகு அவனின் பெற்றோருக்கும் call ஏதும் செய்யவில்லை.

மறுநாள் காலை கண் விழித்தவுடன் தன் mobileஐ தான் முதலில் பார்த்தாள். அதில் ரகுவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

அப்போது ஒருமுறை try செய்து பார்க்களாம் என்று அவனுக்கு அழைத்தாள், ஆனால் எந்த பயனும் இல்லை.

அன்று நாள் முழுவது பல முறை ரகுவை எப்படியாவது தெட்ர்பு கொண்டுவிட வேண்டும் என்று முயற்சி செய்து தோற்று போனால். அவன் அலைபேசியை எடுக்காததால் அவனைத் திட்டுவதா, இல்லை அவன் நிலைமை என்னவோ, எதனால் எடுக்க வில்லையோ என்று அவனுக்காக்க கவலை படுவதா என்று நிலாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

அன்று மாலை officeஇல் இருந்து கிளம்பும் முன் ஒரு முறை கடைசியாக முயற்சி செய்து பார்க்கலாம் என்று அவன் எண்ணுக்கு கால் செய்தாள். மூன்று நான்கு ரிங் போகும் போதே அவளுக்கு நம்பிக்கை முடிந்து போனது.

எப்படியும் அவன் எடுக்க போவது இல்லை என்று முடிவு செய்து போனை கட் செய்ய போனவள், கால் attend செய்திருப்பதைத் திறையில் பார்த்து ஜெயித்துவிட்டோம் என்று மகிழ்ந்து போனாள்.

போனை காது அருகில் கொண்டு போனால், ஆணின் குறல்.

இன்று அனைத்தையும் சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்து “ஹலோ ரகு, நான் நிலா பேசுரேன். உங்ககிட்ட பேசத்தான் ரெம்ப நேரமா try பண்ணிட்டு இருக்கேன்என்று மூச்சுவிடாமல் பேசினாள் நிலா.

அதற்குள் எதிர் முனையில் “நிலா, நான் ரகு இல்லமா, மாமா பேசுறேன்என்று நாகராஜன் பதில் அளித்தார்.

நிலா ஒரு நிமிடத்தில் பயந்து, குழம்பியும் போனாள். இது ரகு நம்பர் தானே, அப்படித்தான் அந்த கார்டிலும் போட்டிருக்கு. ஆனால் இவர் பதில் அளிக்கிறார் என்று நினைத்துக் கொண்டு “uncle இது ரகுவோட நம்பர் தானேஎன்று கேட்டாள் நிலா.

ஆமாம் மா, ரகு அவசரமா கிளம்பி வெளிநாடு போகும் போது போனை இங்கேயே வச்சிட்டு போயிட்டான். இப்போதான் நாங்களும் அத பார்த்தோம். பார்த்தா நீ கால் பண்றஎன்று நடந்ததை விளக்கினார் நாகராஜன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.