வீட்டிற்கு வந்ததில் இருந்து, கல்யாண் தேதி மாற்றமாகி இன்னும் 27 நாட்கள் தான் உள்ளது என்பது வரை மூச்சு விடாமல் ஒப்பித்தார் பானுமதி.
கூறிவிட்டு ரகுவின் பதிலுக்காகக் காத்திருந்தார், ஆனால் அவன் பக்கத்தில் இருந்து வெறும் அமைதி மட்டும்தான். “டேய் ரகு, என்னடா நான் மட்டும் பேசிட்டே இருக்கேன், நீ அமைதியா இருக்க.” என்றார் பானுமதி.
“இவ்வளே சீக்கிரம் கல்யாணம் சொன்னதுக்கு, அவங்க என்ன மா சொன்னாங்க. நான் நிலாவப் பத்தி கேட்கிறேன்” என்று மட்டும் கேட்டான் ரகு.
“நிலானு நீ சொன்னதும் தான் எனக்கு ஞாபகம் வருது ரகு, நிலா, உன் கிட்ட பேசனுனு விரும்புரா போல, உன் mobileக்கு 2 3 தடவை கால் பண்ணிருக்கா. நீயும் முடிந்த ஒரு தடவை கால் பண்ணி அந்த பொண்ணுக்கிட்ட பேசுடா” என்றார் பானுமதி.
“முயற்சி பண்றேன் மா. நான் இப்போ shootக்கு கிளம்பனும். நீங்களும் அப்பாவும் உடம்பை பார்த்துக்கோங்க” என்று பானுமதியைப் பதில் பேசவிடாமல் போனை வைத்தான் ரகு.
ரகு நிலாவிற்கு போன் செய்வதாகக் கூறினான் என்று தன் கணவனிடம் சமாளித்தார் பானுமதி.
மறுநாள் தன் தோழிக்குத் திருமணம் என்பதால் 2 நாட்கள் விடுப்பு எடுத்து நிலா மற்றும் அவள் தோழிகள் எல்லாம் திருமண வீட்டில் தஞ்சம் புகுந்தனர்.
நிலாவிற்கு தன் வாழ்கையைப் பற்றிய கவலை இருந்தாலும், அதை மறக்க தன் தோழியர்களோடு சேர்ந்து சிரித்துப் பேசி முயற்சி செய்தாள்.
அன்று மாலை தன் தோழியின் reception party நடந்து கொண்டிருந்தது. நிலாவும் அவள் தோழிகளும் தன் மணமகள் தோழியை அலங்காரம் செய்வதில் மும்மரமாக இருந்தனர். அப்படியே reception முடிந்து சாப்பிட்டு விட்டு 11 மணி அளவில் நிலாவும் அவள் தோழிகளும் அவர்கள் அறைக்கு வந்தனர்.
வந்தவள் தான் mobile வைத்திருக்கும் bagயை எடுத்து, தன் mobile பார்த்தாள். 5 missed calls.
2 அவள் தாயிடம் இருந்து, மற்ற மூன்று ஏதோ புது நம்பர் போல் இருந்தது. அதை நன்றாகக் கவனித்துப் பார்த்த போதுதான் அது வெளி நாட்டு call போல் இருந்தது.
“ஒரு வேளை ரகுவா இருக்குமோ. நேற்று அவன் அப்பாவிடம் பேசும் போது அவன் வெளி நாட்டிற்கு போயிருப்பதாகத் தானே சொன்னார். ஒரு வேளை அவனாக இருந்திருந்தாள். ஐயோ லூசு, ஒரு நல்ல வாய்ப்பை இப்படி தவற விட்டுட்டியேடி” என்று தானக்குல் புலம்பிக் கொண்டாள் நிலா.
மீண்டும் அந்த எண்ணை அழைக்க முயற்சி செய்தாள், ஆனால் எந்த பலனும் இல்லை.