தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 04 - ஸ்ரீ
அதிகாலையில் இருள் கூட விலகிடாத நேரத்திலேயே விழிப்பு வந்து விட எழுந்து தயாரான ஷியாமா அறையை விட்டு வெளியே வந்த போது யாரும் எழுந்ததற்கான அறிகுறி இல்லாமல் இருக்க கீழே வந்தவள் தோட்டத்தில் நடக்கலாம் என்றெண்ணி வெளியே வந்தாள்.
எங்கிருந்து இந்த கேஸை ஆரம்பிப்பது யாரை சந்தேகப்படுவது என ஆயிரம் விஷயங்கள் அவளுள் சுழன்று கொண்டிருக்க அதே யோசனையோடே நடந்து கொண்டிருந்தாள்.
அந்த நேர அமைதிக்குச் சற்றும் பொருந்தாமல் எதோ ஒரு சிறு சலசலப்பு ஷியாமாமின் கவனத்தை கலைத்தது.சூழ்நிலையை உணர்ந்தவளாய் தன்னை முதலில் மறைத்துக் கொண்டவள் சத்தம் வந்த திசையை கணித்து வீட்டின் பக்கவாட்டு பகுதியில் கவனிக்க யாரோ ஒருவன் முதல் மாடியின் பால்கனியில் இருந்து கீழே இறங்க முயன்று கொண்டிருந்தான்.
தான் இருந்த இடத்தில் இருந்தே அவனை நோக்கி குரல் உயர்த்தினாள் ஷியாமா.
“ஹேய் வெயிட் ஹு ஆர் யூ?”
அதற்குள் அங்கிருந்து குதித்திருந்தவன் வாசலை நோக்கி ஓட ஆரம்பித்திருந்தான் அவன் வேகத்திற்கு ஈடு கொடுத்து வந்தவள் அவனைப் பின்னிருந்து பற்றி முகத்திலிருந்த மாஸ்கை கழட்ட முயன்றாள்.
தன்னை பார்க்க நினைக்கிறாள் என்பதை உணர்ந்தவனோ முழு பலம் கொண்டு அவளைத் தள்ளிவிட்டு ஓட ஆரம்பித்திருந்தான்.அவன் தள்ளிவிட்ட வேகத்தில் ஷியாமாவால் சட்டென எழுந்து கொள்ள முடியாமல் போயிருந்தாலும் அவனின் கண்களையும் அங்க அமைப்பையும் அப்படியே தனக்குள் பதிய வைத்திருந்தாள்.
அப்போது தற்செயலாய் ஜாக்கிங்கிற்கு செல்வதற்காக வெளியே வந்த மகிழன் அவளைப் பார்த்து பதட்டமாய் அவளருகில் வந்தான்.கைக் கொடுத்து அவளைத் தூக்கி விட்டவன்,
“இந்த நேரத்துல இங்க என்ன பண்ற?”
“வாக்கிங் போலாம்னு வந்தேன்.வந்தப்போ அந்த பக்கம் ஏதோ சத்தம் கேட்டு..”
“என்ன?”
“ஆமா பர்ஸ்ட் ப்ளோர் பால்கனில இருந்து ஒருத்தன் இறங்குறதைப் பார்த்தேன்.அவனை பிடிக்க ட்ரைப் பண்ணப்போ தான் என்னை தள்ளி விட்டுட்டு ஓடினான்.”
“வாட் தி ஹெல்.இங்க இந்த நேரத்துல யார் வர முடியும்..செக்கியூரிட்டி??!”
“இல்ல அவன் அந்த பக்கத்து சுவரேறி குதிச்சு தான் வந்துருக்கணும்.”
“ஆர் யூ ஜோக்கிங்..இந்த காம்பவுண்ட் வால் தாண்டி..”
“ஐ அம் ஷுவர் அவன் கேட் இருக்குற பக்கம் வரல ..ரொம்ப தெளிவா…இன்னும் சொல்லனும்னா அடிக்கடி பரிச்சையமான இடத்துக்கு வந்த மாதிரி தான் இருந்தது அவன் பாடி லேங்குவேஜ்.”