விட எனக்கு உரிமை அதிகமவே இருக்குங்க..”,என்றவளை பேச்சுவாக்கில் சற்றே தள்ளி அழைத்துச் சென்றவர்,
“சாந்தி ஆத்திரத்துல வார்த்தை விடாதே அந்த உரிமை உனக்கு இருந்திருந்தா இந்நேரம் இவன் பேசுறதெல்லாம் கேட்டுட்டு நான் அமைதியா இருப்பேனா..உங்கப்பா உயில்ங்கிற பேர்ல தான் நம்மளை இந்த நிலைமை ஆக்கிட்டு போய்ட்டாரே..இன்னும் கொஞ்ச காலம் பொறுமையா இரு..நம்ம தியா இந்த வீட்டு மருமகளா ஆகட்டும் அதுக்கப்பறம் அவனை உண்டு இல்லனு பண்ணலாம்..”
“ம்ம் புரியுதுங்க..இருந்தாலும் அவன் முகத்தை பார்த்தாலே ஆத்திரம் கண்மண்ணு தெரியாம வந்து கோபத்துல வார்த்தையும் வந்துடுது..இனி பார்த்து நடந்துக்குறேன்.”
அங்கு தியாவோ ஷியாமாவை எரிக்கும் பார்வை பார்த்துச் சென்றாள்.ஷியாமாவால் என்ன பிரச்சனை என்பதை யூகிக்க முடியவில்லை எனினும் எதோ ஒரு விதத்தில் அவளுக்குத் தன்னை பிடிக்கவில்லை என்பதை ஒரு ஒரு சந்திப்பிலும் பதிய வைக்க முயற்சிக்கிறாள் என்பது நன்றாகவே புரிந்தது.
தியா எழுந்து சென்றபின் மோனிஷாவும் ஆஷிக்கும் தங்களுக்குள் சிரித்துக் கொள்ள என்ன என்பதாய் புருவம் உயர்த்தினாள் ஷியாமா.
“ம்ம் ஒண்ணும் இல்ல..தியா உங்களை கண்ணாலேயே எரிச்சுடுவா போலேயே..”
“ம்ம் நீங்களும் பார்த்தீங்களா?ஆனா ஏன்னு தான் புரில..”
“ம்ம் பின்ன அண்ணாவோட எர்லி மார்னிங் நின்னு பேசிட்டு இருந்தீங்களாமே?”
“ஆமா அதுக்கும் அவங்களுக்கும்??”
“ஹா ஹா அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாண பேச்சு நடந்துட்டு இருக்கு ஆனா அண்ணா பிடி கொடுத்தே பேச மட்றார்.அதுகுள்ள தாத்தா இறந்துட்டதால அந்த பேச்சு அப்படியே நிக்குது..”
“இன்ட்ரஸ்டிங்..பட் இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்?ஓஓ..என்னை வில்லியா பாக்குறாங்களா?”,என்றவள் லேசாய் புன்னகைக்க மற்ற இருவருமே சிரித்திருந்தனர்.
“இருக்காதா பின்ன அண்ணாக்கு ப்ரெண்ட்ஸ் இருக்காங்கனு சொன்னாலே நம்ப மாட்டோம் அதுலேயும் இப்போ ஒரு பொண்ணு வீட்டுக்கே வந்துருக்கானா..”
“அடடா இது வேறயா இதனால தான் நான் வந்ததை பல பேர் கொலைவெறியோடே பார்த்தாங்களா?”
“ஹா ஹா எங்களுக்கே கூட அந்த டவுட் இருக்கு..”
“ம்ம் அப்போ உங்க அண்ணாகிட்டேயே போய் க்ளியர் பண்ணிட வேண்டியது தான?”
“ஐய்யய்யோ ஆளை விடுங்க தெரியாம பேசிட்டோம்..”