தொடர்கதை - வண்ணமில்லா எண்ணங்கள் - 06 - ஸ்ரீ
மகிழன் தன்னெதிரில் இருந்தவளிடம் இருந்து பதில்லில்லாமல் இருப்பதை உணர்ந்து அவளை ஏறிட அவளோ மாடியையே வெறித்திருந்தாள்.
“என்னாச்சு?”
சட்டென உணர்வு பெற்றவளாய் இடவலமாய் தலையசைத்தவள்,
“உங்க சித்தப்பா இப்போ எப்படி இருக்கார்?அவரு கீழே விழறப்போ யாரும் இல்லையா?”
“ம்ம் அப்போ யாருமே இல்ல..பொதுவாவே மார்னிங் ப்ரேக் பாஸ்ட்க்கு அப்பறம் வீட்ல வேலை செய்யுறவங்களைத் தவிர யாரும் இருக்க மாட்டாங்க.ஆனா மத்த நாள் எல்லாம் இரண்டு சித்தப்பாவும் சேர்ந்து தான் கீழே வருவாங்க இன்னைக்கு அவர் மட்டும் தான் வந்துருக்கார்.வேலை செய்யுறவங்க எல்லாரும் கிட்சன்ல இருந்துருக்காங்க.
அவர் படியில் உருள ஆரம்பிச்ச நேரம் மார்க்கெட் போய்ட்டு முத்து அண்ணா உள்ளே நுழைஞ்சுருக்கார்.சரியா யூகிச்சு அவர் தலை பட வேண்டிய இடத்துல நின்னு தாங்கிப் பிடிச்சுருக்கார்.இல்லைனா…
முத்து அண்ணாகிட்ட கேட்டா யாருமே இல்லை ..ஐயாவா தான் விழுந்த மாதிரி இருந்தது.வயசாகுதுல தடுமாறியிருப்பார்னு சொல்றார்.ஆனாலும்…”
“ம்ம்..ஐ அம் க்ளுலெஸ் மகிழன்..நடக்குற எந்த ஒரு விஷயத்துக்கும் சம்மந்தம் தொடர்பு இருக்குற மாதிரியும் இருக்கு இல்லாத மாதிரியும் இருக்கு..உங்க அம்மாவை பார்த்துக்குற கேர் டேக்கரை நான் பார்க்கவே இல்லையே அவங்க எப்போ போறாங்க எப்போ வராங்க?”
“அவங்க!அவங்க வயசானவங்க ஷியாமா..அம்மாவை விட இரண்டு வயசு பெரியவங்க..அதிகமா கீழே வர மாட்டாங்க..அவங்க இரண்டு பேருக்கும் தேவையான எல்லாமே அங்கேயே இருக்குறதால ரொம்ப ரேர் தான்..அப்போ அப்போ அங்கேயே வராண்டால நடந்துப்பாங்க..அது கூட அம்மா தூங்குற நேரத்துல தான்..
அவங்க இல்லைனா அம்மா ரொம்ப ரெஸ்ட்லெஸா ஆய்டுவாங்க..அதுக்காகவே ரொம்ப கவனமா இருப்பாங்க..”
“ஓ அம்மாவை டாக்டர் கிட்ட காட்றதில்லையா?”
சற்றே அவனின் இறுக்கம் தளர்ந்து ஒருவித கவலை குடிக்கொண்டிருந்தது அவன் முகத்தில் ஷியாமா அவனைத் தான் முழுமையாய் கவனித்துக் கொண்டிருந்தாள்.
“இல்ல எனக்கு விவரம் தெரிஞ்ச அப்பறம் முதல்ல எல்லாம் முயற்சி பண்ணேன்..ஆனா அவங்க ஒத்துழைக்கவே இல்லை.அப்பறம் எனக்கும் பல பொறுப்புகள் வந்ததுனால ஒரு கட்டத்துல விட்டுட்டேன்.
ஆனா அப்போ தான் இந்த கேர் டேக்கர் வந்தாங்க..அக்சுவலா அவங்க அம்மாவோட சின்ன வயசு