(Reading time: 9 - 17 minutes)
Vannamillaa ennangal
Vannamillaa ennangal

அவங்க ஏதோ புரியாம பேசுறாங்கநீ..”

இல்ல சித்தி..இதுக்கு இன்னைக்கே ஒரு முடிவு கட்றேன்..நானும் போனா போகுதுனு அமைதியா இருந்தா சும்மா இஷ்டத்துக்கு பேசிட்டு இருக்காங்க..உங்க கூட பொறந்தவரையே இப்படி சொல்ல கொஞ்சம் கூட உறுத்தலையா உங்களுக்கு..”

நான் என்ன தப்பா சொல்லிட்டேன்..அண்ணாவோட இறப்பு அவரே எதிர்பாராதது.ஒரு வேளை நிறைவேறாத ஆசை எதாவது..”

அடச்சே..ஆசையா..அவருக்கா..உங்களுக்குத் தெரியாதா அவரைப் பத்தி..இறந்து போனவங்களைப் பத்தி இஷ்டத்துக்கு பேசுறதே தப்பு முதல்ல.தாத்தாவோட பேச்சுக்கு மரியாதை கொடுத்து தான் உங்களை இன்னும் இங்க விட்டு வச்சுருக்கேன்.இல்லனா எந்த நேரமும் இந்த வீட்ல இருந்து உங்க குடும்பத்தை என்னால வெளியே அனுப்ப முடியும்.அதுக்கான அதிகாரமும் லீகலா எனக்கு இருக்கு..புரியுதா..

இங்கு பேய் பிசாசு எல்லாம் ஒண்ணும் கிடையாது.சும்மா எதையாவது உளறி மத்தவங்களையும் குழப்பாதீங்க..”,என்றவன் விறுவிறுவென மாடியேறிச் சென்றுவிட அப்போதும் சாந்தி முணுமுணுத்தார்.

உண்மையை சொன்னா இவனுக்கு கசக்குது.வயசு வித்தியாசம் பார்க்காம எப்படி கத்திட்டு போறான் பாருங்க..எல்லாம் எங்கப்பாவை சொல்லணும்.சின்ன பையன்கிட்ட வாயை மூடி நிக்க வச்சுட்டார்..!

சாந்தி கொஞ்ச நேரம் அமைதியா தான் இருங்களேன்.மறுபடியும் வந்தா டென்ஷன் ஆகப் போறான்.”என்று ஆஷிக்கின் தாய் பாயல் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

சர்வேஷும் ராகேஷும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டவாறு அங்கிருந்து வெளியே நகர ஷியாமா அவர்களைக் கவனித்தவாறே பிறர் கவனத்தை ஈர்க்காத வண்ணம் அவர்கள் சென்ற திசையில் சென்றாள்.

அண்ணி சொல்றது ஒரு வேளை உண்மையா இருக்குமோ?”

சர்வேஷ் நீ வேற ஆரம்பிக்காத அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல..அவன் போய் எத்தனை வருஷம் ஆகுது..இந்த பிரச்சனைகள் எல்லாம் இப்போ தான நடக்குது.இதுல வேற யாரோ சம்மந்தப்பட்டுருக்காங்கனு தோணுது..”

என்னால அப்படி யோசிக்க முடில நீங்க சொல்ற மாதிரி நம்ம மாமனார் இறந்தப்போ எனக்கும் சந்தேகம் இருந்தது.ஆனா இன்னைக்கு நடந்த விஷயம் பட்டபகல வீட்டுக்குள்ள யாரும் வர்றதுக்கு வாய்ப்பே இல்லையே..அப்பறம் எப்படி?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.