கொடுக்கப்பட்டதும் சாப்பிட்டனர். பின் கார்த்திக்குமே நித்யாவுடன் சேர்ந்து அவளை தன் கையணைப்பில் இருத்தியப்படியே இருவரும் இயற்கையை ரசிக்க, அந்த தருணம் கூட நித்யாவிற்கு அழகாக தெரிந்தது.
பின் இரவானதும் படகு நிறுத்தப்பட்டிருக்க அது வளற்பிறை காலம் என்பதால், வானில் ஊர்வலம் போகும் நிலாவின் பிம்பம் தண்ணீரிலும் உலா வந்துக் கொண்டிருக்க, உடன் இவர்கள் படகில் இருந்த விளக்குகளின் ஒளியும் சேர்ந்து தண்ணீருக்கு பிரகாசத்தை கொடுத்திருந்தது. பகலை விட இந்த நேரம் அவளுக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுத்தது.
இப்போது இருவரும் எதிரெதிரே அமர்ந்திருக்க, "நித்தி.. இந்த ஹவுஸ் போட்ல இருக்கறது உனக்கு பிடிச்சிருக்கா.." என்று கார்த்திக் கேட்டான்.
அதற்கு, "ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.. 4 நாட்களும் இந்த் ஹவுஸ் போட்லயா இருக்கப் போறோம்.." என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.
"4 நாளும் இந்த ஹவுஸ் போட்ல இருந்தா உனக்கு போர் அடிக்க ஆரம்பிச்சிடும்.. இன்னைக்கு நைட் முடிஞ்சதும் காலையில் கொண்டு போய் நம்மள விட்ருவாங்க.. அப்புறம் அங்க இருந்து நாம மூனார் போகப் போறோம்.."
"அப்படியா மாமா.. மூனார் கூட ரொம்ப அழகாயிருக்கும்னு ப்ரண்ட்ஸ் சொல்லியிருக்காங்க.." என்று அந்த ஊரை பார்க்கப் போகும் உற்சாகத்தில் கூற,
அதை ரசித்து பார்த்தப்படி இருந்தவனுக்கு,, "நீ எந்த ஊரெல்லாம் பார்த்திருக்க நித்தி.." என்று அப்போது தான் அந்த கேள்வி கேட்கத் தோன்றியது.
அவளுமே மகிழ்ச்சியான நிலையில் இருக்கவே, "நாங்க இருந்த ஊர் அப்புறம் சென்னையை தவிர எங்கேயும் போனதில்ல மாமா.. நம்ம கல்யாணத்தப்போ பழனிக்கு போனோமே அதான் நான் புதுசா பார்த்த ஊரு.." என்று நிஜத்தை அப்படியே கூறினாள்
அது அவனது மனதை ஏதோ செய்ய, "ஊர்ல தான் மாமாக்கு உடம்பு சரியில்ல, அத்தைக்கு வேலைக்கு போகணும்னு எந்த சந்தோசத்தையும் அனுபவிக்கவேயில்லை.. இங்க வந்த பிறகாவது உங்களை வெளியூருக்கெல்லாம் அழைச்சிட்டு போயிருந்திருக்கணும்.. ஆனா எப்போதும் வேலையில் பிஸின்னு இருந்துட்டேன்.. பாட்டி, அப்பாக்காவது இதெல்லாம் தோன வேண்டாம்.. நான் ரொம்பவே உங்க விஷயத்தில் கேர்லெஸ்ஸா இருந்திருக்கேன் நித்தி.." என்று வருத்தப்பட்டான்.
"அதான் இப்போ கேரளா வந்துருக்கோமே மாமா.. அப்புறம் என்ன? நீங்க வருத்தமெல்லாம் படாதீங்க மாமா.."
"அத்தைக்கும் இப்படி வெளியூருக்கெல்லாம் போகணும்னு ஆசையிருக்குமில்ல.. ஆனா