"அய்யோ எனக்கு அப்படியெல்லாம் தோனாது மாமா, முதலில் உங்களுக்கு அத்தனை சீக்கிரம் முடி நரைக்காது." என்று பதறியப்படி கூறினாள்.
"உனக்கு ஜோசியம் தெரியுமா? நரைக்காதுன்னு சொல்ற, இப்போ உணவுப் பொருட்களில் செய்ற கலப்படத்துக்கு எல்லாருக்குமே ஆரோக்கியம் குறைஞ்சு போயிடுது, அதனால எனக்கு சீக்கிரம் நரைக்கலாம், அப்போ உனக்கே என்னடா வயசானவனை கட்டிக்கிட்டோமேன்னு தோனுச்சுன்னு வச்சிக்க, அப்போ என்னோட நிலை என்ன?"
"ஏன் மாமா அப்படியெல்லாம் பேசறீங்க?"
"பின்ன ஒன்னுமில்லாத விஷயத்துக்கே டைவர்ஸ் செய்யலாமான்னு கேட்கிற, இதில் இதுக்கு அப்படியெல்லாம் நினைக்க மாட்டேன்னு என்ன நிச்சயம்?" என்று அவன் சொன்னதும் அவள் முகம் வாட,
"உன்னை வருத்தப்பட வைக்க நான் அப்படி சொல்லல, நிஜமா என்னோட மனசுல இருந்ததை தான் சொன்னேன். அப்புறம் என்ன சொன்ன அந்தஸ்த்தா? இதெல்லாம் யாரோட சொத்து நம்ம தாத்தா சம்பாதிச்ச சொத்து, இதில் அப்பாக்கும் அத்தைக்கும் சமமான பங்கு உண்டு. ஆனா அதை பிரிச்சு தர்றதுக்குள்ள மாமா கோபப்பட்டு அத்தையை கூட்டிக்கிட்டு வேற ஊருக்கு போயிட்டாரு, அதனால அத்தைக்கு சேர வேண்டிய சொத்தை அப்பா வியாபாரத்தில் போட்டு அந்த லாபத்தில் உன் பேர்லயும் அத்தை பேர்லயும் ஷேர் வச்சிருக்கார், அதில் இப்போ எவ்வளவு பணம் இருக்கு தெரியுமா? அத்தனையும் உனக்கும் அத்தைக்கும் தான் சொந்தம்,
அதேபோல அப்பாவோட பங்கு எனக்கு, கூட அம்மாக்குன்னு பிரிச்சு கொடுத்த சொத்து கொஞ்சம் இருக்கு, எல்லாத்தையும் சேர்த்து வச்சு பார்த்தா, உன்னைவிட கொஞ்சம் தான் எனக்கு அதிகம், இதுக்கு ஊர்ல எப்படி பேசிக்கிறாங்க தெரியுமா? சொத்து வெளிய போய்டக் கூடாதுன்னு சொந்தத்தில் கல்யாணம் முடிச்சிட்டதா பேசிக்கிறாங்க, நீ என்னடான்னா அந்தஸ்தில் நீ குறைச்சல்னு நினைச்சிட்டு இருக்க,
அடுத்தது என்ன சொன்ன படிப்பு தானே, இங்கப்பாரு நீ வந்த புதிதில் உனக்கு என்ன செய்யணும்னு நான் யோசிச்சதில்ல, பாட்டியும் அப்பாவும் இருக்காங்க பார்த்துப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா பாட்டி நம்ம கல்யாணத்தை பத்தி பேசினதும், நான் உனக்கு இப்போதைக்கு படிப்பு தான் வேணும், கல்யாணம் வேணாம்னு சொன்னேன்.. ஆனா பாட்டி செண்டிமெண்ட்டா பேசி என்னை சம்மதிக்க வச்சிட்டாங்க,
என்னோட பேத்தி இப்போ தான் என்னை தேடி வந்திருக்கா, அவளுக்கு ஒரு நல்லது நடக்கறத கண்ணால பார்க்க நான் உயிரோட இருப்பேனா இல்லையான்னு தெரியல, அதனால நீதான்