வந்து சேர்ந்தார்கள்...
“சக்தி, சந்தோஷ் டாக்டர்ஸ் ஏதாவது விஷயம் சொன்னாங்களா...”
“இன்னும் நாங்க விசாரிக்க ஆரம்பிக்கலை மதி சார்.... அவங்களை ஒரு ரெண்டு நாள் ரூம்ல வச்சு பயம் காட்டினாத்தான் கொஞ்சமாச்சும் வாயைத் திறப்பாங்க.... அதுதான் நம்ம பசங்களை வெளிக்காயம் படாம விளையாட சொல்லி இருக்கேன்....”
“பார்த்துப்பா ரொம்ப விளையாடி படுக்க வச்சுடப்போறாங்க....”
“இல்லை சார் பார்த்துத்தான் பண்ண சொல்லி இருக்கேன்....”
“ஹ்ம்ம் மணி விஷயத்துல நீங்க கொடுத்த CCTV பதிவை வச்சு ஒண்ணும் கண்டுபிடிக்க முடியலை....”
“ஏம்மா பாரதி சாந்தி கேஸ்ல எதாச்சும் கண்டுபிடிக்க முடிஞ்சுதா....”
“மதி சார்... அந்த போன்ல இருந்து சாந்தி ஒரே ஒரு நம்பர்ல மட்டும்தான் பேசி இருக்கா.... அவளுக்கும் அந்த நம்பர்ல இருந்துதான் கால் வந்து இருக்கு...”
“ஒரு வேளை அவ காதலனோட நம்பரா இருக்குமோ....”
“ஹ்ம்ம் இருந்து இருக்கலாம்... அப்படி இருந்தான்னா அந்த காதலன் படு டுபாக்கூர் பார்ட்டியா இருக்கணும்... ஏன்னா அந்த நம்பர் ட்ரேஸ் பண்ணிட்டு போனா பள்ளிக்கரணைல இருக்கற ஒருத்தரோட முகவரி இருந்துச்சு.... அங்க போனா அந்த வீட்டுல ஒரு தொண்ணூறு வயசு முதியவர் இருக்கார்... அவர் எப்படி சாந்தியோட காதலனா இருக்க முடியும்.... ஆனா சிம் அவர் பேருலதான் வாங்கி இருக்கு...”
“மே பி அவருக்கு தெரிஞ்சவங்க இல்லை அவரோட சொந்தக்காரங்க இப்படி யாரானும் அவர் அடையாள அட்டையை உபயோகப்படுத்தி வாங்கி இருக்கலாம் இல்லையா....”
“அவருக்கு அந்த மாதிரி யாரும் இல்லை மதி சார்... அவர் தனிக்கட்டை... வீட்டு வாசல்ல ஒரு பொட்டிக்கடை வச்சு பொழப்பை நடத்திட்டு இருக்கார்....”
“எனக்கென்னவோ அந்த லவர் மனோஜா இருக்கலாமோன்னு தோணுது....”
“எல்லா வழக்கையும் ஏன் அவங்களை சுத்தியே பார்க்கிற சக்தி... வெளியாளா இருக்கலாம் இல்லையா... அதுவும் அந்தப் பொண்ணு மிடில் கிளாஸ்... அவங்கப்பா கட்டாயமா கட்டிக்க ஒத்துக்க மாட்டாருன்னு அவனுக்கு தெரியும்....”
“அது கட்டிக்க நினைச்சிருந்தாத்தானே.... வெட்டி விட நினைச்சிருந்தா...”
“நீ சொல்லுற கோணம் ஒரு விதத்துல சரின்னாலும் ஒரு சாதாரண பொண்ணு விஷயத்துக்கு இந்தளவு அவன் ரிஸ்க் எடுத்திருப்பானான்னு தெரியலை...”
“ஏன் பாரதி மேடம்... அந்த போன்ல மெசேஜ் எதாச்சும் இருந்துச்சா....”