இல்லை.....”
“ஹ்ம்ம் நடுவுல நம்ம மெயின் குற்றவாளி அந்த டாக்டர்க்கு போன் பண்ணாம இருக்கணும்....”
“அதுக்கும் பல குரல்ல பேசற ஒருத்தரை அங்க வச்சிருக்கோம்... அவர் இவங்க மூணு பேர் குரல்ல பேசி சமாளிச்சுடுவாறு....”
“இருந்தாலும் நாம கொஞ்சம் நம்ம வேலைகளை துரிதப்படுத்துறது நல்லது மதி சார்....”
“நீ சொல்லுறது சரி பாரதி... ஆனா விஷயம் வெளிய கசியாம பண்ணனும்... அண்ட் இன்னும் நமக்குத் தெளிவா அவங்கதான் குற்றவாளிங்க அப்படிங்கறதுக்கு போதிய ஆதாரம் இல்லை.... ஒண்ணு பண்ணலாம்... தனித்தனியா கேஸ் எடுத்துக்கலாம்...”
“எனக்கும் அதுதான் சரின்னு தோணுது மதி சார்....”
“அப்போ நீயும், சாரங்கனும் சாந்தி கேஸ் பாருங்க.... நானும் சக்தியும் காலேஜ் லேப் விஷயத்தை பார்க்கிறோம்.... சந்தோஷும், சந்தியாவும் காலேஜ்ல தற்கொலை பண்ணின பொண்ணு கேஸ் பார்க்கட்டும்...”, மதி சொல்ல, இவர்கள் ஒருவரை ஒருவர் எப்படி தொடர்பு கொள்வது அடுத்து எங்கு சந்திப்பது என்று முடிவெடுத்து கிளம்பினார்கள்......
தொடரும்
Go to Gayathri manthirathai story main page
{kunena_discuss:1216}