“ஏன்னா நான்தான் உன்னுடைய முன்னாள் கணவன் ஆகப் போகிறேனே. நம்முடைய டைவர்ஸ் கேஸ் கோர்ட்டில் இருக்கும்மா. நாமளும் டைவர்ஸுக்காகத்தான் இப்படி வனவாசத்தில் இருக்கோம். மறந்துடாதீங்க மேடம்”
“மேடமா?”
“நீங்க என்னை சார்னு சொன்னால்… நான் மேடம்னுதான் சொல்லணும்”
“ஓ… வேறு என்ன சொல்லி கூப்பிடறது. “
“பொதுவா மனைவி கணவனை கூப்புடுவதுபோல கூப்புடு என்று சொல்லலாம்… ஆனால் நாம்தான் டைவர்ஸ் ப்ராஸ்ஸில் இருக்கோமே… அதனால… என்னை அதிரதன்னு கூப்பிடு.”
“பெயர் சொல்லியா…”
“ஆமாம், உன்னுடைய ப்ரெண்டை பெயர் சொல்லித்தானே கூப்பிடுவாய்…?”
“ப்ரெண்டா… அது சரிதான்… ஆனால் அதிரதன்னு சொல்ல தடுமாறுதே…”
“ரத்தன்னுகூட சொல்லும்மா. ரத்த காட்டேரிங்கற ஸ்ட்ரோக்குல சொல்லாதே… ரதன்னு ஸ்டைலா கூப்பிடு” என்று சிரித்தான். காட்டேரியா… அவளுக்கும் சிரிப்பு வந்தது.
அவளுக்கு ஒன்று புரிந்தது. இந்த ரதன்,,, எடிட்டிங் செய்வதை மரபணுவில் மட்டுமல்லாமல் மனதளவிலும் செய்கிறான்.அவளுக்கு அம்மாவின் மீதிருந்த சந்தேகம் இப்போது ஐம்பது சதவிகிதமாக குறைந்து விட்டதுபோல தெரிகிறது.
உறங்கும் முன் மனதிற்குள் வேண்டிக் கொண்டாள். ‘அதிரதன் சொல்வது உண்மையாக இருக்க வேண்டும் அம்மா. நீ குற்றமில்லாதவள் என்பதை உறுதி செய்யணும். நான் அதற்கு முயற்சிப்பேன். ஐ லவ் யூம்மா!’
அந்த இருளில் பரணின் வெளிமூலையில் இருளோடு இருளாக பொதிந்திருந்த ’அது’ சிலிர்த்தது. பனித்துளிபோல நீர் திவலைகள் காற்றில் கலந்தன. ‘அது’ அழுகிறதா?
தொடரும்