(Reading time: 10 - 19 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

சொல்லுறோம்....”, சாரங்கன் சொல்ல வேலு தன் மனைவி, மகன் நிலையை நினைத்து கண்ணீர் விட ஆரம்பித்தார்...

“சார் நான் எல்லா உண்மையும் சொல்லிடறேன்... அவங்களுக்கு மொதல்ல மாத்து மருந்து கொடுங்க சார்....”

“கைல காசு வாய்ல தோசை வேலு சார்.... மொதல்ல உண்மை அப்பறம்தான் மருந்து....”, சாரங்கன் சொல்ல அங்கு தரையில் மண்டியிட்டு அமர்ந்த வேலு உண்மையைக் கூற ஆரம்பித்தார்...

“மணியோட பெத்தவங்க வந்து போன பின்னாடி மணிக்கிட்ட அவன் பண்ணின குத்தத்தை ஒத்துக்க சொல்லி நானும் இன்ஸ்பெக்டரும் மாத்தி மாத்தி சொல்லிட்டு இருந்தோம்.... அவன் மறுபடி மறுபடி தான் கொலை செய்யலை... அந்த நேரத்துல கோவில்ல இருந்தாவே சொல்லிட்டு இருந்தான்.... நாங்க மாத்தி மாத்தி அடிச்சும் பிரயோஜனம் இல்லை... இன்ஸ்பெக்டருக்கு பொறுமை போய் அவனை ஏத்தி ஒரு உதை விட்டாரு... அதுல பின்னாடி போய் டொம்முன்னு சுவத்துல இடிச்சுட்டு கீழ விழுந்துட்டான்... செவத்துல இடிச்சதுல பின் மண்டைல நல்ல அடி... அதோட கீழ விழும்போது அங்க இருந்த டேபிள் முனை  அதே இடத்துல மறுபடி பட மொத்தமா மண்டை ஓபன் ஆகி ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது.... அடுத்த ரெண்டாவது நிமிஷம் அவன் மயக்க நிலைக்கு போய்ட்டான்.... இன்ஸ்பெக்டர் உடனே அவனை அரசாங்க மருத்துவமனைக்கு எடுத்துட்டு போக, போற வழிலேயே அவன் உயிர் போய்டுச்சு.... உடனே அவனை திரும்பி ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு வந்து அவன் வயர் கடிச்சு தற்கொலை பண்ணிக்கற மாதிரி செட்டப் செய்துட்டு, அதை போட்டோ எடுத்துட்டு மறுபடி அவனை மருத்துவமனைக்கு தூக்கிட்டு போனோம்..... அங்க போன பின்னாடி முதல்ல மருத்துவர் கொடுத்தது உங்க கைல இருக்கற பிரேத பரிசோதனை அறிக்கைதான்.... அப்பறம் இன்ஸ்பெக்டர் அவர்க்கிட்ட என்ன பேசினார்ன்னு தெரியலை... அடுத்த அரை மணில வேற அறிக்கை அவன் ஷாக் அடிச்சு இறந்ததா கொடுத்துட்டாரு...”

“ஹ்ம்ம் ஸோ ஒரு குற்றம் சாட்டப்பட்டவர அடிச்சே கொன்னுருக்கீங்க... இதுல நீங்கதான் இந்த ஊரையே தெய்வங்கள்ன்னு உங்களை நம்பி இந்த மக்கள் இருக்காங்க.... அது போகட்டும்... அது எப்படி ஒரே நாள்ல அந்த பையன்தான் குத்தம் செய்தான்னு முடிவுக்கு வந்து அவனை ஒத்துக்க கட்டாயப்படுத்துனீங்க.....”

“அது...... அது.... அவன்தான் அதை பண்ணினான்னு வாக்குமூலம் வாங்க சொல்லி இன்ஸ்பெக்டருக்கு போன் வந்தது சார்... அதன் பிறகுதான் இன்ஸ்பெக்டர் அவன்கிட்ட குற்றத்தை ஒத்துக்கிட்டு கையெழுத்து போட சொல்லி கேக்க ஆரம்பிச்சாரு....”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.