(Reading time: 10 - 19 minutes)
Gayathri manthirathai
Gayathri manthirathai

உண்மையை எங்கக்கிட்ட சொன்னதை சொல்லிட்டீங்கன்னா என்ன பண்ண..... அதுதான் உங்களுக்கு ரெண்டு நாள் ஹவுஸ் அர்ரெஸ்ட்... அப்பறம் உங்க மனைவிக்கும், மகனுக்கும் எந்த ஊசியும் போடலை... நீங்க பண்ணின தப்பு அவங்களுக்கு தெரியட்டும்ன்னுதான் மயக்கமா இருக்கறா மாதிரி நடிக்க சொன்னோம்.... மேடம் எழுந்துக்கோங்க,,,, நீங்களே உங்க புருஷன் பண்ணின தப்பை கேட்டீங்க இல்லை... அவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்ன்னு சொல்லுங்க...”, மதி கேட்க தன் கணவரை அற்ப புழுவை போல பார்த்தார் அந்த பெண்....

“சார் எங்க வீட்டுல எங்க அண்ணன் மிலிட்டரியில் இருந்தவர்,,,,, கார்கில் போர்ல வீர மரணம் அடைஞ்சவர்... என்னோட அப்பா அரசாங்க வேலைல கடைசி வரை கரை படியாத கையோட வேலை செய்தவர்... எங்களுக்கு நீதி, நேர்மை இதைத்தான் சொல்லி சொல்லி வளர்த்தாரு.... அப்படி வளர்ந்தவ இப்படி ஒரு ஆளை கல்யாணம் பண்ணிட்டேன்.... இத்தனை நாளா என்கிட்ட நல்லவர் மாதிரி வேஷம் போட்டு இருந்து இருக்கார்.... நீங்க இவர் மேல எந்த மாதிரி வேணும்னாலும் நடவடிக்கை எடுங்க சார்... என்னோட முழு ஒத்துழைப்பு உங்களுக்கு உண்டு... அதே மாதிரி இந்த வழக்குக்காக எங்க வந்து சாட்சி சொல்லணும் சொல்லுங்க.... அங்க வரேன்....”, தன் மனைவியின் முன்னால் தன் உண்மை முகம் வெளிப்பாட்டுவிட்டதை அறிந்து வெட்கி தலை குனிந்தார் வேலு....

“ரொம்ப நன்றிம்மா.... உங்களை மாதிரியே எல்லாரும் சமூக பொறுப்போட இருந்துட்டா இவங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் அடங்கிடுவாங்க.... ஒரு ரெண்டு நாள் மட்டும் நீங்க இங்க இருங்க .... அடுத்து என்ன பண்ணன்னு யோசிக்கலாம்....”, வேலுவின் குடும்பத்தை அங்கிருந்த ஆட்களிடம் ஒப்படைத்துவிட்டு மதியும், சாரங்கனும் மதியின் இல்லம் நோக்கி சென்றார்கள்.....

அன்று மதியம் சக்தியும், அன்னையும் அந்த பிரபலங்களை அழைக்க அவர்கள் இல்லம் நோக்கி புறப்பட்டார்கள்.... அங்கே அவர்களுக்கு காத்திருப்பது என்ன......  

தொடரும்

Episode # 28

Episode # 30

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.