சிஸ்டம்மை ஆப் செய்து விட்டு மற்ற வேலைகளை மேற்பார்வை 20 நிமிடம் . 5 மணிக்கு என்ட்ரண்சில் நிற்கிறாள் சரியாக. காமாட்சிக்குப் பள்ளி முடியும் நேரம் கேட் திறந்து அன்னையிடம் ஓட தயாராக நிற்கும் குட்டி பிள்ளை நினைப்பு வரவைக்கிறாள்
சிஸ்டமை ஆப் செய்ததுமே சின்னதாக ஏதாவது டிப்பன் செய்யப் பார்வதி அக்கிவிர்கு தொலைப்பேசியில் சொல்லிவிடுவாள், அவள் வீட்டுக்கு செல்வதற்கும் ஆரம்பக்கட்ட தயாரிப்புகள் முடிந்து இருக்கும், இவள் சென்றதும் கொஞ்சம் பைனல் டச் கொடுத்து சர்வ் செய்து விடுவாள்.
இன்றும் அதே மாதிரி வேலையை முடித்தவள் பார்வதிக்கு தொலைப்பேசி செய்து பாரூக்கா... இன்றைக்குக் காரப் பணியாரம் செய்ய ரெட்டி பண்ணலாம் சரியா என்று கேட்க இன்றைக்கு அதுவா தான் இருக்குமென்று நெனச்சேன் என்று சிரித்த பாரூ சரி மா நீ சீக்கிரம் வந்துவிடு என்று வைத்து விட்டாள்.
பைக்கில் ஏரி நேராக தன் வீட்டை அடைந்தாள் பௌவ் வழக்கம் போல சங்கர் கதவைத் திறந்துவிட அவருக்கு அழகான ஒரு சிரிப்பால் நன்றி தரப்பட்டது.
எப்போது வெலியே இருந்து வந்தாலும் கை கால் கழுவி உள்ளே வரத் தோட்டத்திலேயே அறை வசதி இருக்கும் அங்கேயே முகம் கழுவி ப்ரஷ் ஆனவள் நேராக சமையல் அறையினுள் நுழைந்து மட மட என்று 10 நிமிடத்தில் காப்பி டிப்பனை தோட்டத்தில் வைக்க ஏவினாள்.
மாமா அத்தை மித்ரூ நக்ஷ் நிவி அனைவரையும் அழைத்தவள் ஒரு நொடி கிறுகிறுத்துச் சாயத் துடங்கினாள்.
ஏய்..... என்ற குரலுடன் ஒரு கை அவளை அனைத்து பிடித்துக் கொண்டது.
டேய்... வந்ததும் வராததும் என் பெண் என்ன செய்தாய் என்று.கமலும்...
நீ செய்வது எதுவும் எனக்குச் சரியா படல தம்பி என்று கணியும் கடிய
அமைதியாகக் கணவன் கையினுள் இருந்தவள் கொஞ்சமாக எம்பி அத்தை மாமா.... நான் தான் கால் இடறியதும் விழப் போனேன்
ம்ம்ம்ம்.... இப்ப சொல்லு டி . எல்லாரும் என்னைத் திட்டி கழுவி ஊதினபிறகு. தோ பார் இன்னும் இவர்கள் என்னை முறைத்தபடி தான் நிக்ரான்ங்க.
போங்க டா போங்க போய் புள்ளக் குட்டிய படிக்க வையுங்கள்....
டேய் அந்நா அதற்கு முதலில்ல நீ புள்ளையா பெற்று கொடு டா என்று நக்ஷ்ஷும் மித்ரூவும்...
இப்ப தான டா கேக்குரீங்க ஏற்பாடு பண்ணிடுவோம் டோண்ட் வரி என்று ஈஷ்வர் சொல்ல ....
ஐ யே மாமா விடுங்கள் என்று அதுவரை அவன் கையிலிருந்து நெளிந்தவள் புலியின்