இதன் அழகும் பார்ப்பவர்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது...
தோட்டத்தைச் சுத்தப்படுத்தலாம் என்று பௌவ்வும் கனியும் வரிந்துகட்டி இரங்க மித்ரூ நிவி நக்ஷ் மற்றும் கமலும் உடன் சேரத் தோட்டத்தின் முன் பக்கம் அதிக வேலையில்லை ஆணால் பின் பக்கம் புதர் அடைந்து சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்தது... தேவை இல்லாத செடிகள் குப்பைகள் என மண்டி சோகவணமாய் காட்சியளிக்க வேலையாட்கள் அனைவரையும் பயன்படுத்திப் போன வாரம் சனிக் கிழமை தான் அதாவது ஈஷ்வர் கிளம்பியதில் இருந்து இரண்டாம் நாள், சுத்தம் செய்து யேர்கனவே ஆர்டர் செய்த ரோஜா செம்பருத்தி மல்லி வகை செடிகளால் கலக்கல் தோட்டம் அமைத்தனர். ஏர்கனேவே இருந்த அரிய வகை மரங்கள் செடிகளை சரியான அளவு தண்ணீர் போகும் படி மேடும் பள்ளமாக அமைத்து எழிலைக் கூடினாள் அந்த வீட்டு மகராசி.
இப்போது தான் சுற்றிப் பார்த்தான் ஈஷ்வர் டேய் நக்ஷ் பேங்ளூர்ள இருக்கிறதே ஏ வீ பூங்கா அதுமாதிரி இல்ல? அங்க போனால் நீ என்ன ஆணாலும் பூங்காவுக்கு போய்விட்டுத் தான் வருவேன் சொல்லுவ இல்ல டா...
டேய் அண்ணா அந்த பார்கே நிவி என்னை கூட்டிட்டு போனதால தான் எனக்கு தெரிந்தது.-நக்ஷ்.
அது அக்காவுக்குப் பிடித்த இடத்தில் ஒன்று அவர்கள் அங்க போகும் போது எல்லாம் நிறையச் சந்தோஷமா அந்த இடத்தை பற்றி சொல்லுவார்கள், அங்க இருக்க ஒவ்வொரு பூ செடி மீன் பன்னை, பறவைகள் சரணாலயம், தேனீக்கள் பன்னை இப்படி எல்லாமே மனப்பாடம். என் அக்கா எதைப்பற்றிப் பேசினாலும் எனக்குப் பிடிக்குமே.. என்று நிவி பௌவ்வை அனைத்துக் கொல்ல(அந்த இடம் எனக்கு பிடித்ததுக்கும் காரணம் இருக்கிறது டி குட்டி என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள்)நிவி.
ஆணால் நிவி எனக்கும் அந்த பூங்கா ஏன் அவ்வளவு பிடித்திருக்குக்கிறது என்று எனக்கு தெரியவில்லை இருந்தும் எனக்கும் பிடித்துத் தான் இருந்தது என்று பௌவ்வை பார்த்துச் சொன்னான்.
அத்தான் நான் இங்க இருக்கிறேன் என்று அவளைக் கலாய்த்தவள் , சரி வாங்க அக்கா எல்லாருக்கும் காரப் பணியாரம் சட்டினி செய்து இருக்கிறார்கள் சாப்பிடலாம். -நிவி.
இஷா இங்க கொண்டு வர சொல்லிவிட்டேன் டா உட்காரலாம் வாங்க என்று அந்த மரத்தின் அருகேயே போடப்பட்டிருந்த வட்ட கல்மேஜை அருகில் சுற்றி அமர ஏதுவாக அழகான கல் மேடை அருகே அழைத்துச் சென்றாள்.
இது யார் ஐஐடியா என்று ஈஷ்வர் கேட்க,