அதிகமாக இங்கு ஒட்டவில்லையோ என்று சில நேரங்களில் இவனுக்கு தோன்றியதும் உண்டு. அத்தை மாமா என்று கனியையும் கமலையும் பாசத்துடன் அழைப்பாள் ஆனால் அவள் மனதில் பயமும் இருப்பதாக தோன்றும். சத்தமாகப் பேசமாட்டாள் தேவைகளைப் பூர்த்தி செய்வாள். வேலை செய்பவர்களையும் கவனித்துக் கொல்வாள் அதிகாரம் இருக்காது ஆனால் பேச்சி குறைவாகத் தான் இருக்கும். மனைவி மட்டுமா மாறியிருக்கிறாள்...
இந்த ஒரு வாரத்தில் வீட்டுத் தோட்டத்தில் வேலையாட்களையும் சேர்த்துக்கொண்டு தோட்டத்தை பராமரிப்பது, மாலை சிற்றுண்டி மொட்டைமாடியில் காப்பியுடன், ஒரு நாள் பௌவ் சொன்னதால் அம்மா கையில் அல்லிக் கொடுக்க நிலாச் சோறு கூட கிடைத்ததே. அப்பா பள்ளியில் கால்பந்து வீரர் என்பது அவர் நேற்று போட்ட கோல் சொன்னது. அம்மா கம்பு சுற்றுவதில் திறமைக் கொண்டவர் என்று பௌவ்வுடன் சரிக்குச் சரி சுற்றும் போது தானே அப்பாவுக்கே தெரிந்தது. தோட்டம் பராமரிக்கும் சங்கர் அண்ணன் வாய்ஸ் ஜே சுதாஸ் போல இருக்கும் என்பது இரண்டு நாட்களுக்கு முன்பு விளையாடிய அன்தாச்சரி தெரிவித்தது.
மித்ரூ ஈஷ்வர் திருமணத்திற்கு வரும் வரை என்ன சொன்னான் இங்குத் தங்க முடியாது வேலை அதிகம் அப்படி இப்படி என்று பிதற்றியவன் மம்மட்டியைப் பிடித்து மண்ணைக் கொத்தி கிளறி மாமரம் நட்டது என்ன... பாட்டுக்கு பாட்டுப் பாடியது என்ன... சமையல் செய்தான் , ஊஞ்சலில் ஒரு கொக்கி உடைந்து இருப்பது தெரிந்ததும் அவனே கடைக்குப் போய் அதை உடனே மாற்றினானே...
வேலை செய்யும் பார்வதி அக்காவின் மகன் 10 வகுப்பில் 498 மதிப்பெண் பெற்றது கூட புது செய்தி தான்...
இவை அனைத்தையும் தெரிந்து வைத்திருந்த ஒருத்தி என் ஏஞ்சல்., என் அண்ணி ., என் மாமன் மகள், என் தோழி , என் மனைவியின் அக்கா இப்படி நிறையச் சொந்தமாய் போனவள் பௌவ். அவளுக்கு எங்களுக்கு எது பிடிக்கும் எது பிடிக்காது... எது ஒத்துக்காதுனு கூட தெரிந்து வைத்திருந்தாள்.
இதற்கு முன்பும் இவளை வேறாக என்ன தோன்றாது இப்போதோ... தூங்குரது சாப்பிட்ரது மாதிரி நிறையச் சாதாரணமா பழக்கம் ஆகி போய்விடா.
இவர்கள் திருமணம் முடிந்து அடுத்த நாள் ஊருக்கு ஜோடியா வந்தார்கள் வந்ததும் அவளைத் தனியா விட்டுவிட்டு இந்த மடையன் அவன் பாட்டிற்கு கிளம்பி போய்டான் வேலைனு. அது தான் வருத்தம் எல்லாருக்கும். ஆனால் அதை யாரும் வெலியே சொல்ல அவள் மனம் புண்