எல்லாமே பெண்களின் அரை நிர்வாணப் படங்கள்! ஆபாசப் படங்கள்!
வசந்தா ஆல்பத்தை மூடிவைக்கும்போது, அங்கே ஒரு வேலைக்காரி, துடைப்பத்தை எடுத்துக்கொண்டு, அறையை சுத்தம் செய்வதுபோல பாவனை செய்துகொண்டு, வசந்தாவிடம் ரகசியமாகப் பேசினாள்.
" அம்மா! உன்னைப் பார்த்தால் ஊருக்கும் தொழிலுக்கும் புதுசுபோல தெரியுது, உன்னை சினிமா நடிகையாக்கறேன்னு ஆசைகாட்டி அழைச்சு வந்திருப்பாங்களே, அதெல்லாம் பொய்! இங்கு உள்ள எல்லாருமே பொம்பளை பொறுக்கிங்க! சமயம் பார்த்து தப்பிச்சுக்க!"
வேலைக்காரி வெளியேறிய சிறிது நேரத்தில், அங்கு இரண்டு ஆண்கள் வந்தனர்.
" உன் பேரு என்னம்மா?"
" வசந்தா!"
" இத பாரும்மா! நாங்க எடுக்கப்போவது, புராணப்படம்! நீ அதிலே பார்வதியா நடிக்க பொருத்தமான்னு மேக்அப் டெஸ்ட் பண்ணி பார்க்கப்போறோம்.
அதுக்கு, என்ன செய்வோம்னா, உன் உடம்பு முழுவதும் கலர் பவுடர் பூசி மேக்அப் போடுவோம். தவிர, உனக்கு புடவை கட்டிவிடுவோம், கையிலே ஒரு சூலத்தை கொடுத்து நிற்கவைத்து ஒரு போட்டோ எடுப்போம். தயாரிப்பாளரும் இதெல்லாம் நடக்கும்போதே, இங்கு வந்து கலந்துக்குவார்! அவர் ஓ.கே. பண்ணிட்டார்னா, காண்டிராக்ட் போட்டுவிடுவோம், உன் சம்பளம் பத்து கோடி ரூபாய்!" என்றார், ஒருவர்.
அடுத்தவர், "டைரக்டர் சொன்னதை காதிலே வாங்கிண்டீங்களா? நான்தான் மேக்அப் மேன்! உங்களுக்கு உடம்பு பூரா கலர் பவுடர் பூசி அரிதாரம் போட்டு, புடவை கட்டி ரவிக்கை போட்டுவிடுவேன்.
ஆல்பத்திலே இருக்கிற போட்டோவை பார்த்தியா? இங்க வர்ற பெண்கள் எல்லாருமே கூச்சப்படாம இதுக்கெல்லாம் சம்மதித்து இன்னிக்கி பெரிய ஸ்டாரா கோடிக்கணக்கிலே சம்பாதிக்கிறாங்க, உன்னையும் முதல் படத்திலேயே ஸ்டாராக்கிடுவோம். சரியா? நீ உடுத்தியிருக்கிறதை எல்லாம் கழற்றி வை! நாங்க தயாரிப்பாளரை பார்த்து அழைத்து வந்துடறோம்....."
இருவரும் வெளியேறியதும், வேலைக்காரி ஓடிவந்து, " இதுதான் சமயம்! தப்பிச்சு போயிடும்மா!" என்றாள்.
வசந்தா சிரித்துக்கொண்டே வெளியேறினாள்!
பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த பகுதியில் பார்ப்போம்
தொடரும்
Next episode will be published on 7th Mar. This series is updated weekly on Tuesday mornings.