தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 27 - பிந்து வினோத்
“விக்ரம் வந்திருந்தார் ரோம்மா”
சோர்வாக தெரிந்த ரோஹினி எதற்கு என்ற கேள்வியுடன் கலாவைப் பார்த்தாள்.
”உன்னையும் அஜயையும் வச்சு செய்தி வந்து ஒரு வாரமாச்சு. தீவுல எங்கே பார்த்தாலும் மக்கள் இன்னும் அதைப் பத்தி கிசிகிசு பேசிட்டு இருக்காங்களாம்”
ரோஹினி நெற்றியை தேய்த்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.
“அஜய் வேற இங்கே அரண்மனையில ஒரு வாரமா இருக்கான். கட்டாயம் அந்த செய்தியும் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அப்புறம் பேச்சுக்கு கேட்கனுமா என்ன?”
“சரி கலாம்மா. விக்ரம் என்ன சொல்ல வந்தார்?”
“அஜயை தீவை விட்டு கிளம்பச் சொல்ல சொன்னார்”
“அது நட
...
This story is now available on Chillzee KiMo.
...
ுவும் நடக்கப் போறதில்லை”
“இது நீ விரும்புற மாதிரி தான் போகும்னு சொல்ல முடியாதே. என்ன வேணா ஆகலாம்.”
“எனக்கு வேற வழி தெரியலை கலாம்மா. தாத்தாவும், விக்ரமும் பிடிவாதம் பிடிக்குறப்போ